சென்னையில் நடந்த உழவன் பவுண்டேசன் விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சிவக்குமார் சிறுவயதில் தான் பட்ட கஷ்டங்களை உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.
சென்னை தியாகராய நகரில் , நடிகர் கார்த்தியின் உழவன் பவுண்டேசன் விருது வழங்கும் விழாவில் பேசிய சிவக்குமார், பெண்களை படைப்புக் கடவுள் என்று புகழ்ந்தார்.
தான் 10 மாத குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்து விட்டதாகவும், தனது தாய் தான் தன்னை வளர்த்ததாகவும், அன்று மட்டும் தனது தாய் இல்லா விட்டால், இன்று சூர்யா, கார்த்தி எல்லாம் கிடையாது என்று உருக்கமாக பேசினார்.
மழைகாலத்தில் குளிருக்காக சாக்குபைகளை போர்த்திக் கொண்டு படுத்ததாகவும், மின் சாரம் இல்லாத கிராமத்தில் தனது தாயின் அரவணைப்பில் தங்கள் வீட்டில் வளர்த்த பசு பயிரான கதையையும் விவரித்தார்.