செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பிரிந்து சென்ற காதலருடன் சேர்த்து வைப்பதாக கூறி நகைகள் மோசடி.. 2 பஞ்சாப் வாலாக்கள் கைது!

Jan 24, 2023 07:17:52 AM

பிரிந்து சென்ற காதலருடன் சேர்த்து வைப்பதாக கூறி, சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் 40 சவரன் தங்க நகைகளை வாங்கி மோசடி செய்ததோடு, தனிப்பட்ட தகவல்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டிய 2 பஞ்சாப் இளைஞர்கள்  கைது செய்யப்பட்டனர்.

காதலில் தோல்வியடைந்த சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், காதலரை மீண்டும் அடைவதற்கு கூகுளில் வழி தேடியுள்ளார். அப்போது "ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்"என்ற செயலி தெரிய வரவே, அதை பதிவிறக்கம் செய்து தனது பெயர், காதல் குறித்த தனிப்பட்ட தகவல்களை பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து அவரை தொடர்பு கொண்ட 2 இளைஞர்கள், காதலருடன் இணைத்து வைப்பதாக கூறி சென்னை விமானநிலையத்துக்கு வரும்படி அழைத்துள்ளனர்.அங்கு வந்த இளம் பெண்ணிடம் நைசாக பேசி, 2 தவணைகளாக 40 சவரன் தங்க நகையை வாங்கியுள்ளனர்.

ஆனால் சொன்னது போல காதலருடன் சேர்த்து வைக்காத 2 பேரும், மேலும் 5 லட்சம் ரூபாய் வேண்டுமென அந்த பெண்ணிடம் கேட்டுள்ளனர்.

இதற்கு அந்த பெண் செவி மடுக்காததால், அவர் ஏற்கெனவே அளித்த தனிப்பட்ட தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அஞ்சிய இளம் பெண், விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் அளித்த ஆலோசனையின்பேரில், 2 பேரிடமும் பேசி விமான நிலையத்துக்கு அந்த பெண் வரவழைத்தார்.

அங்கு வந்த 2 பேரையும் மடக்கி போலீசார் விசாரித்தபோது, அவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அனில் குமார், ககன்தீப் பார்கவ் என்பதும், இதைப்போல் பல இளம் பெண்களையும் இளைஞர்களையும் ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்துள்ளதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 8.5 லட்சம் ரூபாய், 54 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement