செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தொண்டர்கள் குண்டர்களானதால் போர்க்களமான சத்தியமூர்த்திபவன்..! கே.எஸ்.அழகிரி காரை மறித்ததால் அடி உதை

Nov 16, 2022 09:05:39 AM

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நியாயம் கேட்டு 10 பேருந்துகளில் வந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டதால் , கே.எஸ். அழகிரியின் ஆதரவாளர்கள் ஓட ஓட விரட்டி இரும்பு பைப்புகளால் தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்குன்னு கேட்கற அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் மீண்டும் ஒருமுறை தொண்டர்களை தாக்கிய குண்டர்களால் ரத்தகளரியானது

இந்த முறை நெல்லை கிழக்கு மாவட்ட தலைவரை மாற்றக்கோரி 10 பேருந்துகளில் சென்னைக்கு வந்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் காரை மறித்து, ஆவேசம் காட்டியதால் அடிதடி அரங்கேறியது..!

அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை இழுத்து வழியில் போட்டதோடு, எங்க ஊருக்கு வந்து பாருடான்னு சாலையில் நின்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோஸ்வாவை, நாசுக்காக பேசி உள்ளே அழைத்துச்சென்ற உள்ளூர் தொண்டர்கள் இரும்பு பைப்பால் அடித்து வெளியே விரட்டினர்

அவர் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, இன்னும் போகலையா என்று மீண்டும் தாக்கப்பட்டார்

இது ஒரு புறம் இருக்க அழகிரியின் காருக்கு முன்னால் நின்று ஓங்கி குரல் எழுப்பிய தொண்டரை, குண்டர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதில் அவரது வாய் உடைந்து நிலை குலைந்து போனார்.

விழுந்த அடியில் தன் கையில் கடிகாரம் அணிந்திருப்பதையும் மறந்து, கீழே கிடந்த கடிகாரத்தை தன்னுடையது என்று கேட்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது.

அவரிடம் நீங்கள் எந்த பகுதி என்று செய்தியாளர்கள் கேட்ட போது அவர் ஒரு பகுதியும் வேணாம், போதும் போங்க என்று விரக்தியோடு வெளியேறினார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெயர் சொல்ல விரும்பாத காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், சத்தியமூர்த்திபவனில் எந்த ஒரு அடிதடியும் நடக்கவில்லை என்றும் சினிமாபாணியில் தங்கள் தலைவரின் வாகனங்களை மறித்தவர்களை வெளியேற்றியதாக விளக்கம் அளித்தார்.

 


Advertisement
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement