செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

திமுக பிரமுகர் கொலை... கைமாறிய ரூ 30 லட்சம்... இரு பெண்களின் சதி அம்பலம்..!

Feb 16, 2022 10:36:41 AM

சென்னை மடிப்பாக்கத்தில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் 30 லட்சம் ரூபாய் கொடுத்து கொலைகார கூலிப்படையை ஏவிய இரு பெண்களை பிடித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

சென்னை மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளரான செல்வம் கடந்த 1ந்தேதி 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் விக்கிரவாண்டியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

மீதமுள்ள நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தநிலையில் கூலிப்படையை சேர்ந்த அருண் என்ற மற்றொரு கூட்டாளியும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கூலிப்படை தலைவனான முருகேசனைப் பிடித்தால் தான் இந்த கொலைக்கான பின்னணி முழுமையாக தெரியும் என போலீசார் கூறிவந்தனர்.

இந்த நிலையில் கூலிப்படை தலைவன் முருகேசனுக்கு பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு அசைன்மென்ட் கொடுத்ததாக கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அசைன்மெண்ட் கொடுத்த அந்த பெண் சென்னையில் பிரபல ரவுடி ஒருவரின் மனைவி எனவும், முன்னதாக ரவுடியின் மனைவியை தொடர்பு கொண்டு பேசியவர் சென்னை செம்பாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி எனவும், இந்த கொலைக்காக 30 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் கூலிப்படைத் தலைவன் முருகேசனை கைது செய்வதற்கு தீவிரமாக தேடி வருகின்றனர். கூலிப்படை தலைவனின் வாக்குமூலத்தின் படி, ஏவி விட்ட இரு பெண்களும் வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்
பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?
அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?
மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை
புதுக்கோட்டையில் கனமழை - வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவில் இருந்த குழந்தை உள்பட குடும்பத்தினர் மீட்பு
மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி நடனம்.. மின் கம்பம் மோதி தூக்கி வீசப்பட்ட மாணவன்..
கவரப்பேட்டையில் விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில்போக்குவரத்து தொடங்கியது...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நள்ளிரவில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சி - லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளிப்பு
சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா ரோப் காரில் பழுது - 20 நிமிடங்கள் வரை அந்தரத்தில் தொங்கிய 2 பெண்கள் மீட்பு
ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement