செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஃப்ரீபயர் விளையாட்டுக்கு பணத்தை திருடாதீங்க.. திருந்திய மாணவர் அட்வைஸ்..!

Jan 28, 2022 12:10:12 PM

ஃப்ரீ பையர் விளையாட்டில் கிராபிக்ஸ் ஆயுதங்கள் வாங்குவதற்காக, வீட்டில் பணம் திருடி சிக்கிக் கொண்ட சிறுவர்களை அழைத்து காவல்துறையினர் அறிவுரை கூறி பெற்றோரிடம் அனுப்பிவைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய பகுதியில், பள்ளிச் சிறுவர்கள் ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் மூழ்கி, தங்களது கல்வியை இழந்தது மட்டுமின்றி, வீட்டில் பணத்தைத் திருடி விளையாட்டிற்கு செலவழிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 14வயது சிறுவன், தனது தந்தையின் பையில் இருந்து 3 ஆயிரம் ரூபாயைத் திருடி ஃப்ரீ ஃபயர் ஐடி வாங்கி விளையாட்டில் இழந்த நிலையில், வீட்டில் தெரிந்தால் பிரச்சினை வரும் என நினைத்து, வீட்டில் இருந்து காணாமல் போய் விட்டான். புகாரின் பேரில், புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சிறுவனைத் தேடிவருகின்றனர். தற்போது வரை அந்த சிறுவனைக் கண்டுபிடிக்கவில்லை.

அவனைப் போலவே பல சிறுவர்கள் ஃப்ரீ ஃபயர் விளையாட்டிற்காக, வீட்டில் பணத்தைத் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை ராஜீவ் நகரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வரும் அரசுப் பள்ளி மாணவன் ஒருவன், தொடர்ச்சியாக செல் போனில் ஃப்ரீ ஃபயர் விளையாடி வந்துள்ளான்.

ஃப்ரீ ஃபயரில் விதவிதமான கிராஃபிக்ஸ் ஆயுதங்கள், பறந்து செல்ல கிராபிக்ஸ் ரெக்கைகள் வாங்குவதற்காக, தனது தந்தைக்குத் தெரியாமல் அவரது சட்டைப் பையில் இருந்து, 4 ஆயிரம் ரூபாய் எடுத்து ஃப்ரீ ஃபயரில் செலுத்தி விளையாடி உள்ளான்.

இது அவனது தந்தைக்கு தெரிந்துவிட, அவர் பசுவந்தனை காவல் நிலையத்திற்கு மகனை அழைத்துச் சென்று, அறிவுரை வழங்கும்படி கேட்டுக் கொண்டார். பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரகலா நடத்திய விசாரணையில், தனது நண்பர்களுடன் ஃப்ரீ ஃபயர் விளையாடுவதற்காக செல்போன் ரீசார்ஜ் கடையில் 4,000 ரூபாய்க்கு பணம் கட்டியதாக அச்சிறுவன் தெரிவித்தான்.

இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அவனுக்கு அறிவுரை வழங்கிய காவல் ஆய்வாளர் சித்ரகலா, சிறுவனை எச்சரித்து, பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

ரம்மியைப் போல சிறுவர்களிடம் பணத்தைப் பறிக்கும் ஆன்லைன் விளையாட்டான ஃப்ரீ ஃபயரைத் தடை செய்ய ஆவண செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement