செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

"நான் ஒன் மேன் ஆர்மி" ; கொலை செய்துவிடுவேன் என போலீசாரையே மிரட்டிய ரௌடி

Jul 18, 2021 09:44:51 PM

தான் "ஒன் மேன் ஆர்மி" என்றும் "கேஸ் டேங்கர் லாரியுடன் புகுந்தால் 500 பேரை கொன்றுவிடுவேன்" என்றும் ஆடியோ வெளியிட்டு போலீசாரையே மிரட்டிய நெல்லை மாவட்ட ரௌடியை சென்னையில் வைத்து துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்தவன் “கோழி அருள்” என்கிற அருள்ராஜ். கொலை, கொள்ளை, வழிப்பறி என சுமார் 23க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் காவல்துறையின் சரித்திர குற்றவாளிகள் பட்டியலில் இருப்பவன் இந்த கோழி அருள்ராஜ். அண்மையில் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் 5 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், கோழி அருள் காவல்துறையை எச்சரிக்கும் வகையில் சில ஆடியோக்களை வெளியிட்டுள்ளான். அதில் ஒப்பந்ததாரர் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் ஏரியாவுக்கு 50 ரௌடிகளை இறக்குவேன் என்றும் அவர்களில் 30 பேர் இறந்தாலும் பரவாயில்லை ஆனால் குறைந்தது 100 பேரையாவது கொன்றுவிடுவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தான் கோழி அருள்.

போலீசாரைக் கொல்ல கேஸ் டேங்கர் லாரியையோ, ஆசிட் டேங்கர் லாரியையோ எடுத்துக் கொண்டு தான் ஒன் மேன் ஆர்மியாகக் களமிறங்குவேன் என்றும் 500 பேரையாவது கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்திருந்தான் கோழி அருள்.தன்னை எத்தனை போலீசார் வந்தாலும் பிடிக்க முடியாது என்றும் சந்தனக் கடத்தல் வீரப்பனை தேடியது போல தேட வேண்டி இருக்கும் என்றும் கோழி அருள் தனது ஆடியோவில் மிரட்டி கலகலப்பூட்டியிருந்தான்.

கோழி அருளின் இந்த ஆடியோ காட்டுத்தீயாய் சமூக வலைதளங்களில் பரவ, களத்தில் இறங்கிய போலீசார், அவன் பேசிய செல்போன் ஏண்ணை வைத்து டிராக் செய்யத் தொடங்கினர். அந்த எண்ணின் சிக்னல் சென்னை அம்பத்தூர் பகுதியை அடையாளம் காட்டவே, அம்பத்தூர் பகுதி போலீசாரும் வேட்டையில் இறங்கினர். இறுதியாக அத்திப்பட்டு பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த கோழி அருளை துப்பாக்கி முனையில் கொத்தாகத் தூக்கினர். 

போலீசாரையே மிரட்டும் அளவுக்கு வளர்ந்துள்ள இதுபோன்ற ரௌடிகள் சாதாரண மக்களோடு மக்களாக உலவுவது எப்படி எனக் கேட்கும் சமூக ஆர்வலர்கள், கூடையில் அடைத்து வைக்கும் கோழிகளை அவ்வப்போது வெளியில் திறந்துவிடுவது போல் அல்லாமல் கோழி அருள் போன்றவர்கள் முற்றாக திருந்தும் வரை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement