செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சின்னத்திரை மேனேஜரிடம் சிக்கிய ஆசிரியைக்கு நேர்ந்த கொடுமை..! கண்டு கொள்ளாத போலீஸ்

Jun 30, 2021 09:36:00 AM

தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக ஆசைகாட்டி, ஆசிரியை ஒருவரை 4 முறை கர்ப்பிணியாக்கி கருவைக் கலைத்ததாக சீரியல் மேனேஜர் மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவருக்கு அறிமுகமான ரகு என்பவர், தொலைக்காட்சி தொடர்களில் மேனேஜராக பணிபுரிவதாகக் கூறியுள்ளார்.

சீரியலில் நடிக்க வைப்பதாகக் கூறி நெருங்கிப்பழகிய ரகு அந்த ஆசிரியையிடம் மேக்கப் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று அழைத்துச்சென்று அத்துமீறியதாக கூறப்படுகின்றது.

திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததால் ஆசிரியை மவுனமான நிலையில், கர்ப்பமான அவரை கருவை கலைக்க வைத்து பின்னர் மீண்டும் திருமண ஆசை காட்டி அத்துமீறியதாக கூறப்படுகின்றது.

எப்படியும் ரகு தன்னை திருமணம் செய்து கொள்வார் என நம்பி அவருடன் ஊர் சுற்றி ஆசைக்கு இணங்கிய நிலையில் 4 முறை கர்ப்பமாகி கருவைக் கலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக ஆசிரியை வேதனை தெரிவித்தார்இந்த நிலையில், ஆசிரியை மீதான மோகம் தீர்ந்ததும் அவரை கழற்றிவிட்ட ரகு, ஆசிரியையின் இருசக்கர வாகனத்தையும், 2 சவரன் செயினையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

ரகு தன்னை ஆசைவார்த்தை கூறி வாழ்க்கையை சீரழித்து விட்டதாக சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் ஆசிரியை புகார் அளித்தபோது, ரகுவை அழைத்து விசாரிக்காமல், தனது இரு சக்கர வாகனத்தையும் நகையையும் பெற்றுக்கொடுத்து விட்டு வழக்கை விசாரிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

தனது புகாரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் அந்த ஆசிரியை முறையிட்டார். இதையடுத்து ஆசிரியையின் புகார் மீது விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆயினும் காவல்துறையினர், 8 மாதங்களாக காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே சீரியல் மேனேஜராக இருந்து சில தொடர்களில் நடித்து வரும் ரகு மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், புகார்களை வாபஸ் பெறுமாறு தன்னை மிரட்டி வருவதாகவும், காவல்துறையினர் தனது புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகாரில் நடவடிக்கை எடுத்ததை போன்று தனது புகார் மீதும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக ஆசையால் மோசம் போன ஆசிரியை தெரிவித்துள்ளர்.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement