செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எஸ்.பி.ஐ. ATM-ல் கைவரிசை.. சிகரம் தொடு பட பாணியில் திருடியவர்களை சீக்கிரம் பிடிக்க போலீசார் வடமாநிலம் விரைவு!

Jun 23, 2021 06:17:41 AM

மிழகம் முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கி டெபாசிட் மிஷின்களில் நூதன முறையில் இதுவரை 48லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் கொள்ளை கும்பல் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதால், அவர்களை பிடிக்க தனிப்படை வடமாநிலம் விரைந்துள்ளது.

எஸ்பிஐயின் பணம் டெபாசிட் செய்யும் எந்திரத்தில் பணம் எடுக்கவும் முடியும். ஏ.டி.எம். அட்டையை மிஷினுக்குள் செலுத்தி, எடுக்க வேண்டிய தொகையை 20 நொடிகளுக்குள் எடுக்கவில்லை எனில் மீண்டும் பணம் உள்ளேயே திரும்பிவிடும். இந்த தொழில்நுட்பத்தை அறிந்து கொண்ட கொள்ளையர்கள், பணம் வந்தவுடன் 20 நொடி வரை அதை எடுக்காமல் இருந்துவிட்டு, அதன்பின் பணம் மீண்டும் உள்ளே செல்லும் போது, சென்சார் பகுதியில் விரல்களை வைத்து தடுத்து நிறுத்தி பணத்தை மட்டும் எடுத்து விடுவார்கள். 20 நொடிக்குள் பணம் எடுக்கப்படாததால் ஏ.டி.எம். மிஷினும் பணத்தை வாடிக்கையாளர் எடுக்க வில்லை என கருதிவிடும். இதனால், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் இருப்பு தொகை குறையாது. இந்த தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டு பல லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்த மர்ம நபர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொள்ளை தொடர்பாக எஸ்பிஐ வங்கியின் சென்னை மண்டல முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் அளித்தார். பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்திருப்பதாகவும், சிசிடிவி காட்சிகளை வைத்து மோசடி கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எஸ்பிஐ வங்கியின் தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் பணம் செலுத்தும் எந்திரங்களில் எஸ்பிஐ வங்கி இரண்டு வகையான எந்திரங்களை பயன்படுத்துவதாகவும், அதில் ஜப்பான் நாட்டின் ஓ.கே.ஐ. என்ற நிறுவனம் தயாரித்துக் கொடுத்த ஒரு வகை டெபாசிட் எந்திரத்தில் மட்டுமே கொள்ளை நடந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இதனிடையே, கொள்ளை கும்பலை பிடிக்க அமைக்கப்பட்ட 2 தனிப்படைகள் வடமாநிலம் விரைந்துள்ளன. 


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement