செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

டம்மி பாபாவுக்கு சாமரம் வீசிய ‘சுளுக்கு’ ஸ்மிதா..! ரகசிய அறையும் கண்டுபிடிப்பு

Jun 19, 2021 01:26:38 PM

பள்ளிக்குழந்தைகளை மூளைச் சலவை செய்து டம்மி பாபா சிவசங்கரனின் பாலியல் இச்சைக்கு அனுப்பிவைத்த புகாருக்குள்ளான பக்தை சுஷ்மிதாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே சுஷில் ஹரி இன்டர்நேஷனல் என்ற பள்ளியை நடத்தி வந்த சாமியார் சிவசங்கர் பாபா, அந்த பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டம்மி பாபா சிவசங்கர் மீது இதுவரை இரண்டு முன்னாள் மாணவர் உட்பட மூன்று மாணவிகள் கொடுத்த புகார்களில் மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த புகாரில், சிவசங்கர் ஆசிரமத்தில் பணிபுரியும் அவருடைய பெண் பக்தர்கள் சிலரும் பள்ளியின் ஆசிரியர்கள் சிலரும் சிவசங்கரனின் பாலியல் இச்சைக்காக மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

அதனடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட சிவசங்கரின் பெண் பக்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் மீதும் சிபிசிஐடி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவசங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெண் பக்தர்கள் 3 பேர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் கருணா, நீரஜ் என்ற இரண்டு பெண் ஆசிரியைகளும், சுஸ்மிதா என்ற பள்ளியின் முன்னாள் மாணவியிடமும் கிடுக்கிப்பிடி கேள்விகளால் சுளுக்கெடுத்தனர்.

இதில் சிவசங்கருக்காக பள்ளி மாணவிகளின் வாழ்க்கையையே சீரழிக்க முக்கிய காரணமாக இருந்தது சிவசங்கரின் நீண்ட கால பக்தையான சுஷ்மிதா என்பது விசாரணையின் முடிவில் தெரியவந்ததையடுத்து போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

சிறுவயதிலிருந்தே சுஷில் ஹரி பள்ளியில் படித்த சுஷ்மிதா படிப்பு முடிந்த பின்பும் டம்மி பாபாவின் லீலைகளால் ஈர்க்கப்பட்டு பக்தையாக மாறி அங்கேயே வீடு எடுத்து அவரது ஆதரவுடன் வசித்து வந்துள்ளார்.

சிவசங்கருக்கு பக்தையாக பணிவிடை செய்வதும், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை மூளைச்சலவை செய்து பாபாவின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் கைது செய்யப்பட்ட சுஷ்மிதாவிற்கு ஆறு மாத குழந்தை ஒன்றும் உள்ளது.

அவரை கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். தொடர்ந்து விசாரணை வளையத்தில் உள்ள சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர்கள், அந்த பள்ளியின் ஆசிரியைகள் மேலும் சிலர் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே ஆசிரமத்தில் சிவசங்கர் தங்கியிருந்த சொகுசு பங்களாவில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

முழுவதும் கருப்பு கண்ணாடி மற்றும் திரை சீலைகளால் மூடி மறைக்கப்பட்டிருந்த அந்த பங்களாவில் சிவசங்கர் பயன்படுத்திய படுக்கை அறை மற்றும் மாணவிகளை சந்தித்த ரகசிய அறைகளை ஆய்வு செய்தனர்.

அந்த அறைகளுக்கு டம்மி பாபாவை அழைத்துச்சென்று விசாரணை நடத்தும் திட்டத்தில் காவல்துறையினர் இந்த ஆய்வில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசங்கர் உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறியதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டம்மி பாபாவுக்கு சாமரம் வீசிய சுஷ்மிதாவை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement