செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஏழைகளுக்கு ஓர் அட்சய பாத்திரம்..! பசிப்பிணி போக்கும் தொண்டு நிறுவனம்

May 15, 2021 10:38:48 AM

கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் சென்னையில் உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடும் சாலையோர ஏழை மக்களுக்கு, தனியார் தொண்டு நிறுவனம் தினமும் இருவேளை உணவு விநியோகித்து பசிப்பிணி போக்கி வருகிறது.

கொரோனாவின் கட்டுக்கடங்காத வேகம் ஒருபுறம்- கட்டுப்பாடுகளுடன் அமலில் இருக்கும் முழு ஊரடங்கு மறுபுறம் என இடையில் சிக்கித் தவிக்கும் சாலையோர ஏழை மக்களின் பசிப்பிணி போக்கும் பணியில் சென்னையைச் சேர்ந்த அன்பின் பாதை என்ற தனியார் தொண்டு நிறுவனம் களமிறங்கி உள்ளது.

மனிதம் தாண்டி புனிதம் இல்லை என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, அன்பின் பாதை என்ற அமைப்பை நடத்தி வருவதாக இதன் நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.

சாந்தோம், மெரினா, அடையார், மைலாப்பூர் உள்ளிட்ட சுமார் 5 கிலோ மீட்டர் சுற்று வட்டார பகுதிகளில் உணவு தேவைப்படுவோரை அடையாளம் கண்டு ஆதரவு இவர்கள், ஆதரவு கரம் நீட்டி வருகிறார்கள்.

நாள்தோறும் மதியம் மற்றும் இரவு என இரு வேளை, சுடச்சுட உணவு வழங்கி வரும் அன்பின் பாதை பணியாளர்கள், ஏழைகளுக்கு இலவசமாக உணவு கொடுக்க விரும்புவோர் 9941642120 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளுமாறு, கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுதவிர, சாந்தோம் தேவாலயம் எதிரே உணவுப் பெட்டகமும், துணி பெட்டகமும் இடம் பெற்றுள்ளன.

உணவு தேடி வருவோருக்கு உணவு கிடைப்பதுடன் பெட்டகத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ள பழைய துணிமணிகள், பல ஏழை- எளிய மக்களின் மானம் காக்க உதவுகிறது.

இல்லாதவர்கள் கையேந்தும் போது, இருப்பவர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்வது தான் மனித நேயம் என்பதை உணர்த்தும் வகையில் செயல்படுகிறது இந்த தொண்டு நிறுவனம்...

 


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement