செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சென்னை பைபாஸ் சாலை அதிவேக கார் ஓட்டியால் அழகிய குடும்பமே நிர்கதி..! கணவன் பலி – உயிரை மாய்த்த மனைவி

Apr 27, 2021 11:59:00 AM

சென்னை பைபாஸ் விரைவுச்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் கார் மோதி பலியான நிலையில், கணவர் மறைவை தாங்கிக் கொள்ள இயலாமல் அவரது மனைவி குழந்தைகளுடன் விஷத்தை அருந்திய விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிவேக கார் ஓட்டியால் ஒரு குடும்பமே நிர்க்கதியான சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார், தனியார் நிறுவன ஊழியரான இவர் மனைவி நிதா, 10 வயது மகன், 6 வயது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

கடந்த மாதம் 15ம் தேதி அம்பத்தூரில் பணியை முடித்து மதுரவாயல் புறவழிச்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மனோஜ் குமார் பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதியதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தால் மனோஜ்குமாரின் குடும்பமே நிலைகுலைந்தது. உறவினர்கள் ஆறுதல் சொல்லியும் அவரது மனைவி- குழந்தைகளைத் தேற்ற இயலவில்லை. கணவனை இழந்த சோகம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்த மனைவி நிதா விபரீத முடிவை மேற்கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இரு குழந்தைகளும் உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் நிதா ரத்த வாந்தி எடுப்பதை கண்ட அவரது மகன் தொலைபேசி மூலம் தனது பெரியப்பாவுக்கு தகவல் தெரிவித்துள்ளான். உடனடியாக அங்கு சென்ற அவர் மூவரையும் மீட்டு தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

அங்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நிதா உயிரிழந்த நிலையில், இரு குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தகவல் அறிந்து உடலை கைப்பற்றிய போலிசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். அதில் குடும்பத்தோடு கணவனிடமே சென்று விடலாம் என்ற விபரீத முடிவெடுத்து நிதா விஷம் குடித்தது தெரியவந்தது.

பைபாஸ் சாலையில் கார்களில் அதிவேகமாக செல்வோர் நிதானத்துடன் வாகனத்தை இயக்க தவறினால் அது விபத்தோடு நிற்பதில்லை, அந்த விபரீதம் ஒரு குடும்பம் அழிவதற்கே காரணமாகிவிடும் என்பதை சற்று அழுத்தமாகவே உணர்த்துகின்றது இந்த சம்பவம்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement