செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தெருவில் செல்லும் பெண்களிடம் வம்பு மகனை கொன்ற தாய்..! கதையை முடித்த திருமண போதை

Feb 11, 2021 07:22:46 AM

டலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே 36 வயதாகியும் திருமணமாகாத ஏக்கத்தில் தெருவில் செல்லும் பெண்களிடம் போதையில் வம்பு செய்த மகனை , பெற்ற தாயே தெருவில் வைத்து அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர் போதைக்கு அடிமையானதால் நிகழ்ந்த விபரீதம் 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் நடராஜன் மனைவி குப்பாயி. இவருக்கு மூன்று மகன்கள் ஒரு ஒருமகள் இருந்தனர். மூத்த மகன் பாக்கியராஜ் திருமணம் ஆகி திருப்பூரில் வசித்து வரும் நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மகள் இறந்துவிட்டார்.

இரண்டாவது மகன் பாஸ்கருக்கு 36 வயதான நிலையில் திருமணம் ஆகாத எக்கத்தில் மது போதையில் தெருவில் செல்லும் பெண்களிடம் வம்பிழுப்பதை வாடிக்கையாக்கியுள்ளான்.

இதனால் தங்கள் குடும்ப கவுரவம் பாதிப்பதாக கருதிய தாய் குப்பாயி பலமுறை கண்டித்தும் பாஸ்கர் சொல்பேச்சு கேளாமல் தொடர்ந்து அடாவடி செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

செவ்வாய்கிழமை இரவும் குடித்துவிட்டு வந்த பாஸ்கர் தனது தாய் குப்பாயி, தம்பி பிரபாகரன் ஆகியோரிடம் தகராறு செய்துள்ளார்.

வீதியில் வைத்து பாஸ்கர் செய்த சேட்டைகளை கண்டு ஆவேசம் அடைந்த குப்பாயி தனது இளைய மகன் உதவியுடன் பாஸ்கரை கயிற்றால் கட்டி தூக்கி போட்டு மிதித்துள்ளார்

அப்படி இருந்தும் போதையால் அடங்க மறுத்து அலப்பறை செய்த பாஸ்கரை, இரும்பு கம்பியால் குப்பாயியும், இளைய மகன் பிரபாகரனும் சேர்ந்து கடுமையாக தாக்கி வீட்டிற்குள் இழுத்துச்சென்றுள்ளனர்.

பின்னர் சிறிது நேரத்தில் வீட்டின் கதவை பூட்டிவிட்டு அமைதியாக இருந்துள்ளனர்.

புதன்கிழமை காலை பாஸ்கர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக கூறி எதுவும் அறியாதவர்கள் போல அழுதுகொண்டே இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

பாஸ்கரை குடும்பத்தினரே அடித்துக் கொன்று விட்டதாக ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்திற்கு ரகசியமாக ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பாஸ்கரனின் சடலத்தை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிணகூறாய்வுக்காக்கு எடுத்துச் சென்றனர் .

சம்பவம் குறித்து 65 வயது தாய் குப்பாயி தம்பி பிரபாகரன் ஆகிய இருவரிடமும் தொடர்ந்து சேத்தியாதோப்பு டிஎஸ்பி சுந்தரம் விசாரணை மேற்கொண்ட நிலையில் இருவரும் நடந்த சம்பவத்தை மறைக்க முயன்றதாக கூறப்படுகின்றது.

உடனடியாக குடியிருப்பு பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பாஸ்கரை தாய் குப்பாயி தம்பி பிரபாகரன் கொடூரமாக தாக்கி இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனடிப்படையில் இவர்கள் மீது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தாய் குப்பாயி மற்றும் தம்பி பிரபாகரனை கைது செய்தனர்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் திருமணம் செய்ய தவறினால், போதைக்கு அடிமையாகும் மகன்களால் என்னமாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்தச் சம்பவம்..!

 


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement