செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

"உயரும் நிலத்தடி நீர்மட்டம்" கை கொடுக்கும் கோவில் குளங்கள்..!

Nov 27, 2020 10:39:33 AM

பருவ மழை காரணமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் தீர்த்தக் குளம் முழுமையாக நிரம்பி வழிகிறது. பல கோவில் குளங்களும் நிரம்புவதால், நிலத்தடி நீர் மட்டம், அதிகரிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.

வட கிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாநகரின் பல்வேறு கோவில் குளங்களும் தண்ணீரால் நிரம்பி வருகிறது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளம் நிரம்பி விட்டது. மயிலாபூர் கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில் குளங்களும் கணிசமாக நிரம்பி வருகின்றன.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அகஸ்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் குளம், 5 ஆண்டுகளுக்குப்பின் தற்போது முழுமையாக நிரம்பி உள்ளது. இதனால், இந்தாண்டு தீர்த்தவாரி திருவிழா நிச்சயம் கொண்டாடப் படும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

நுங்கம்பாக்கம் கோவில் குளத்தில் நிரம்பி வழியும் அளவுக்கு நீர் சேமிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கோவில் குளத்தை தூர்வாரியதாலேயே இந்த ஆண்டு இந்தளவிற்கு மழை நீரை சேமிக்க முடிந்ததாக ஆலயத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கோவில் குளங்கள் உள்ளன. இவைகளில் பெரும்பாலான கோயில் குளங்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரம்பி, ரம்மியமாக காட்சியளிக்கின்றன.

இவை அழகையும் , கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மனநிம்மதியையும் தருகின்றன. கோவில் குளங்கள் நிரம்பும் போது, சுற்று வட்டாரப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து, பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது.


Advertisement
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement