செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

“சைக்கோ” கணவனின் கொடுமைகள் நீதிக்காக காத்திருக்கும் பெண்

Oct 15, 2020 09:11:55 AM

லண்டனை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த சென்னையைச் சேர்ந்த எச்.சி.எல் நிறுவன அதிகாரி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணவரை பிரிந்து மகளுடன் லண்டனில் வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ராஜ்குமார் அய்யாசாமி என்ற நபர் அறிமுகமாகி இருக்கிறார். சென்னை அம்பத்தூர் எச்.சி.எல் நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் உள்ள ராஜ்குமார் அய்யாசாமி அப்போது லண்டனில் உள்ள அந்நிறுவன கிளையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

நண்பர்கள் மூலம் அறிமுகமான அந்தப் பெண்ணுடன் வாட்சப் சேட்டிங் செய்து வந்த ராஜ்குமார் அய்யாசாமி, தனது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் அதனால் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். 2 ஆண்டுகள் இ-மெயில் மூலமும், வாட்ஸ் அப் மூலமும் ராஜ்குமார் பொழிந்த காதல் வசனங்களை நம்பி அந்த பெண்ணும் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.

சென்னைக்கு பணிமாற்றமான ராஜ்குமார் தனக்கு விவகாரத்து ஆகிவிட்டதாக கூறி, 2014 லண்டன் பெண்ணை சென்னை வரவழைத்து அடையாறில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். முறையாக பதிவு செய்யப்படாத அந்தத் திருமணத்துக்குப் பின் சைக்கோ போல மாறிய ராஜ்குமார் அய்யாசாமி லண்டன் பெண்ணுக்கு தினசரி பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, முதல் திருமணத்தை விவாகரத்து செய்யாமல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்துவதாக ராஜ்குமார் மீது அடையாறு காவல் நிலையத்தில் லண்டன் பெண் கடந்த 2016ஆம் ஆண்டு புகாரளித்துள்ளார். அப்போது நம்பிக்கை மோசடி என்ற பிரிவில் மட்டும் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை அய்யாசாமியை கைது செய்ய, சில நாட்களில் அந்த நபர் பிணையில் வெளியில் வந்துவிட்டார்.

இதனையடுத்து நீதிமன்றத்தை நாடிய லண்டன் பெண், திருமணத்துக்கு முன் ராஜ்குமார் அய்யாசாமி தனக்கு போதை மருந்து கொடுத்து ஆபாசமாக எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்து, அவற்றின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என முறையிட்டுள்ளார்.

மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், பாலியல் வழக்கை வெறும் மோசடி வழக்காக மட்டும் பதிவு செய்தது ஏன் என காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வழக்கை மீண்டும் விசாரிக்க அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.


Advertisement
தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement