செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சாத்தான்குளம் இரட்டை கொலை.. 5 பேரை காவலில் எடுக்க சிபிஐ முடிவு..!

Jul 14, 2020 07:43:31 AM

சாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கை கொலை வழக்காக சிபிஐ மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரை 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை கையில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக சாத்தான்குளம் காவல் நிலையம், அரசு மருத்துவமனை  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து நெல்லை வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ ஏடிஎஸ்பி விகே சுக்லா உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகளை, சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு சந்தித்தது. அப்போது, சிசிடிவி டிஸ்க் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சிபிஐ வசம் அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக வழக்கு தொடர்பான விசாரணைக்காக, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரை 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதியிடம் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மனு மீது செவ்வாய்கிழமை விசாரணை நடைபெறும் என கூறினார். மேலும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள 5 பேரையும் செவ்வாயன்று குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சந்தேக மரணம் எனப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை சிபிஐ கொலை வழக்காக மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் முதல்குற்றவாளியாக உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ், 4ஆம் குற்றவாளியாக ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் சேர்க்கப்பட்டிருப்பதாக சிபிஐ வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது கொலை உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த இருவரில் ஸ்ரீதர் தரப்பில் மனு வாபஸ் பெறப்பட்டது. உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது..

 


Advertisement
ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்
தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement