செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சாத்தான்குளம் இரட்டைக்கொலை 10 போலீசாரிடம் சி.பி.ஐ. விசாரணை ?

Jul 11, 2020 11:07:15 AM

சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் இருந்து 10 பேரும், டெல்லியிலிருந்து ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் என இரு குழுக்களாக சிபிஐ அதிகாரிகள் மதுரை வந்தனர்.

பின்னர் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின், வழக்கு ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம், சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் ஒப்படைத்தார். 

இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் சேகரித்த ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், சாத்தான்குளம் காவல்நிலையம், கோவில்பட்டி கிளைச்சிறை மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட தடயங்களையும் சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடங்களையும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோன்று கைது செய்யப்பட்ட 10 போலீசாரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக அவர்கள் மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் சாத்தான்குளம் வழக்கு தொடர்பான நீதிபதி பாரதிதாசன் விசாரணை அறிக்கை, ரத்தக்கறை படிந்த பொருட்கள் ஆகியவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.


Advertisement
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement