செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

செம்மொழியான தேன்மொழியே..! கொரோனா பீதியிலும் குதுகலம்

Mar 18, 2020 07:52:39 AM

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்க பூங்காக்களும், வணிகவளாகங்களும், திரையரங்குகளும் மூடப்பட்டு சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடக்க, செம்மொழி பூங்காவில் அமர்ந்து தேன் மொழியால் பேசிக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் விரட்டி விடப்பட்டனர். 

சென்னை வாகன நெரிசலின் முகவரியான அண்ணாசாலையில் ஆள் அரவம் இல்லை..!

மக்கள் கூடும் மால்களுக்குள் நுழையவே அனுமதி இல்லை..!

பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பூங்காக்களில் கூடிவிட போகிறார்கள் என்று அத்தனை பூங்காக்களும் இழுத்து மூடப்பட்டு விட்டது.

ஆனால் சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவிற்கு இந்த அறிவிப்பு கிடைக்க சற்று காலதாமதமானதால் வழக்கம் போல பூங்கா கதவுகள் திறந்திருந்தன.

காலை 11 மணிக்கெல்லாம் பூங்காவில் உள்ள இருக்கைகளையும், மூங்கில் புதர்களையும் காதல் ஜோடிகள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

காதல் வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்கள், கொரோனா வைரஸை பற்றி கவலை கொள்ளாமல் செம்மொழி பூங்காவில், தேன்மொழியில் பேசிக் கொண்டிருந்தனர் ..!

கொரோனா பீதியில் சிட்டியே டல்லாக காட்சி தந்த நிலையில் காதலர்களின் வருகையால் செம்மொழி பூங்கா கொரோனாவுக்கே டஃப் கொடுத்துக் கொண்டிருந்தது

12 மணி அளவில் கொரோனா எச்சரிக்கை அறிவிப்பு செம்மொழி பூங்கா நிர்வாகத்துக்கு வந்து சேர புதர் மறைவில் எதிர்காலம் குறித்து குதுகலமாக பேசிக்கொண்டு இருந்த காதல் ஜோடிகளையும் அவர்களை வேடிக்கை பார்க்க வந்தவர்களையும் பூங்கா காவலாளிகள் விரட்ட தொடங்கினார்.

50க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள், 11 மணி காட்சி முடிந்து தியேட்டரில் இருந்து கூச்சத்துடன் வெளியே வருவது போல ஒவ்வொருவராக முகத்தை மூடிக்கொண்டு வெளியேறினர்

பூங்காவிற்குள் இத்தனை ஜோடிகள் இருந்ததா ? என்பதை பார்த்து பூங்கா ஊழியர்களே மிரண்டு போயினர். இருந்தாலும் சில காதல் ஜோடிகள், கொரோனாவெல்லாம் தங்களை தடுத்து விட முடியுமா என்று பூட்டப்பட்ட பூங்கா வாசலில் அமர்ந்து அன்பை பறிமாற தொடங்கினர்..!

காதல் வைரஸை விட, கொரோனா வைரஸ் கொடியது என்பதை அனுபவ பூர்வமாக உணராதவரை நம்மவர்கள் அரசின் எந்த ஒரு முன்எச்சரிக்கை நடவடிக்கையையும் பின்பற்றாமல் ஏளனம் மட்டுமே செய்து கொண்டிருப்பார்கள் என்பதே கசப்பான உண்மை..!


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement