செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மெரினாவில் புற்றீசலாய் அதிகரிக்கும் கடைகள், என்ன செய்யபோகிறது சென்னை மாநகராட்சி ?

Feb 12, 2020 11:26:15 AM

சென்னையின் அடையாளமாகத் திகழும் மெரினா கடற்கரை, சிறு குறு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் , மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரையின் அழகிய தோற்றம் தான் இது... கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், உழைப்பாளர் சிலை , கற்பாறை சிற்பம், வரலாற்றில் இடம் பிடித்த நாயகர்களின் சிலைகள், முன்னாள் முதலமைச்சர்களின் நினைவிடங்கள் என தமிழகத்தின் அடையாளங்களை பறைச்சாற்றும் மையமாகவும், சென்னைக்கு வரும் சுற்றுலா பிரியர்களின் விருப்ப இடமாகவும் திகழ்கிறது மெரினா.

இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட கடற்கரை, எண்ணற்ற சிறு குறு கடைகளால் ஆக்கிரமித்துக் கிடப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மெரினா கடற்கரை சீரமைப்பு தொடர்பான வழக்கில், 1,342 சிறுகுறு கடைகள் மட்டுமே இங்கு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி கணக்கு காண்பித்துள்ள நிலையில், கள யதார்த்தமோ அதற்கு நேர்மாறாக பலமடங்கு அதிக எண்ணிக்கையிலான கடைகள் கடற்கரையில் அமைந்துள்ளன. இதிலும் பல கடைகளின் உரிமையாளர்கள் உள்வாடகைக்கு விட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உழைப்பாளர் சிலையில் அருகே மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு உள்ளே வருவதற்கான சாய்தளம் , பொதுமக்கள் பயன்பாட்டிற்கான படிகள், ஏன் அவசர சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையத்தின் நுழைவுவாயில் கூட ஆக்கிரமிப்பு கடைகள் வசம் இருந்து தப்பவில்லை

இது ஒருபுறமிருக்க, சிற்றுண்டிகள், துரித உணவகங்கள் அனைத்தும் கடற்கரை மணலிலே கூடாரங்களை அமைத்து அடுப்புமூட்டி இருக்கைகளையும் போட்டு இடையூறு ஏற்படுத்துவதாக முகம் சுளிக்கும் பொதுமக்கள், நீதிமன்றம் அறிவுறுத்தியும் கடைகளை வரைமுறைப்படுத்தாமல் மாநகராட்சி காலம் தாழ்த்துவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

முன்பெல்லாம் காமராஜர் சாலையில் இருந்துகூட கடல்அலைகளைப் பார்த்து ரசிக்க முடிந்ததாகவும், தற்போது வரிசையாக நீண்டு கிடக்கும் கடைகள் கடலின் அழகை மறைத்து நிற்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக விளக்கமளித்த மாநகராட்சி அதிகாரிகள் , கடைகளை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், 900 கடைகள் மட்டுமே வைக்க அனுமதித்து, தலா 1,200 ரூபாய் வீதம் வாடகை வசூலிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

உலகளவில் புகழ்பெற்ற மெரினா கடற்கரையை மீட்டெடுத்து பாதுகாக்க, மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என்பதே மெரினாவிற்கு வழக்கமாக செல்வோரின் எதிர்பார்ப்பு.


Advertisement
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement