செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

விஷாலை விளாசிய நீதிபதி.. எதிர்காலத்தில் நடிக்க தடை.. கோபத்திற்கு என்ன காரணம்..? எப்போதுமே ஏமாற்றினால் இப்படித்தான்..!

Sep 12, 2023 09:07:53 PM

லைக்கா நிறுவனத்திடம் பெற்ற கடனை விஷால் கொடுக்க மறுத்ததால், மார்க் ஆண்டனி படத்திற்கு  தடை விதிக்கப்பட்ட நிலையில் , சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிய நடிகர் விஷாலை கேள்விகளால் விளாசிய நீதிபதி, பணத்தை செலுத்த வில்லை என்றால் விஷால் தொடர்பான அனைத்து படங்களையும் எதிர் காலத்தில் வெளியிட தடை விதிக்கலாமா? என்றதால் அதிர்ச்சி அடைந்தார்.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற கடனான 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, பணம் செலுத்தியது. அந்த தொகையை முழுமையாக திருப்பி செலுத்தும் வரை, விஷால் தனது பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளையும் , லைகா நிறுவனத்துக்கு மட்டுமே வழங்க வேண்டுமென்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் வீரமே வாகை சூடும் என்ற படத்தை நேரடியாக வெளியிட்டதால், விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லைக்காவுக்கு கொடுக்க வேண்டிய கடனுக்காக 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்தது. அதனை நிறைவேற்றாததால், நீதிமன்றம் நடிகர் விஷாலை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அதன் படி விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது, கடந்த முறை தன்னிடம் நிதி ஆதாரம் இல்லை எனத் தெரிவித்த விஷால் அதே நாளில் ஒரு கோடி ரூபாயை மார்க் ஆண்டனி படத்தை தயாரித்த மினி ஸ்டூடியோவிடம் இருந்து பெற்றுள்ளதாக கூறிய நீதிபதி இது நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவிப்பது என்று விஷால் மீது அதிருப்தி தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி 15 கோடி ரூபாயை செலுத்தாவிட்டால் விஷால் படங்களை வெளியிட தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விஷால், லைகாவுக்கு கொடுக்க வேண்டிய தொகையை மட்டும் ஏன் கொடுக்கவில்லை என்றும் உத்தரவாதம் அளித்து விட்டு அதை செயல்படுத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்

இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டதால் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், நிதி ஆதாரம் இல்லை எனக் கூறிய நாளில் விஷாலின் வங்கிக் கணக்கில் 91 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் மினி ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வங்கிக் கணக்கு விவரங்களில் 1 கோடியே 61 லட்ச ரூபாய் விஷால் வங்கிக் கணக்கில் இருந்ததாக கூறப்பட்டுள்ளதே என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், அந்த தொகையில் இருந்து 90 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி. வரியாக செலுத்தப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவு ஏதும் மீறப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தான் நடிக்கும் படங்களுக்கு 40 கோடி ஊதியம் பெற்றுள்ள விஷால், பணத்தை செலுத்தாவிட்டால் நடிப்பதை நிறுத்த வேண்டும் என லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விஷாலின் நான்கு வங்கிக் கணக்குகளின் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன ? சொத்து ஆவணங்களுடன் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஆஷா, நீதிமன்றத்தில் கூறியதற்கு முரணாக வங்கி கணக்கில் விவரம் எதுவும் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என விஷாலை எச்சரித்தார்.

மேலும் பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் விஷால் தொடர்பான அனைத்து படங்களுக்கும் எதிர்காலத்தில் தடை விதிக்கலாமா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கிடையே மினி ஸ்டூடியோவின் மார்க் ஆண்டனி படத் தயாரிப்பில் விஷாலுக்கு தொடர்பு இல்லை என்பதால் அந்தப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி படத்தை வெளியிட அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Advertisement
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்
நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு.. நடிகை ரோகிணி அளித்த புகார் - மருத்துவர் காந்தராஜ் மீது பாய்ந்த வழக்கு..!
விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத்.. 2025 அக்டோபரில் படத்தை வெளியிட திட்டம்..
தொழில் துறைக்கு ஒரு நேர்மையான முன்னுதாரணம் நடிகர் சங்கம்:தனுஷ்
விஜய் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகள் 21 கேள்விகளுக்கு பதிலளித்த த.வெ.க 85 ஏக்கரில் தயாராகும் மாநாட்டு இடம்
திரைப்படத்துறையை ஊத்திமூட முயற்சி நடப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் புகார்
மலையாள நடிகரும் ஜெயிலர் படம் வில்லனுமான விநாயகன் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது.
கோவையில் The G.O.A.T படத்தைக் காண வந்த நடிகர் சிவகார்த்திகேயன்
கோட் திரைப்படம் கேரளா, கர்நாடகாவில் அதிகாலை வெளியானது... ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement