செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காதல் மனைவிக்கு பைத்தியக்காரி பட்டம்.. அர்னவுக்கு போலீஸ் ஆப்பு..! 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

Oct 09, 2022 11:49:00 AM

காதல் மனைவி திவ்யா மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி மனைவி தெரிவித்த புகாரை திசை திருப்பிய செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ்  மீது காதல் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

செவ்வந்தி சீரியல் நடிகை திய்வாயை காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்து கர்ப்பிணியானதும் கவிட்டதாக செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி வந்த நிலையில் குடும்ப விவகாரம் என்பதால் அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து தீர்வு காணலாம் அதுவரை பொறுமையாக இருக்கும் படி போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகின்றது..

போலீசாரின் அறிவுரையை ஏற்காத அர்னவ், தனது மனைவி திவ்யா மன நலம் பாதிக்கப்பட்டவர் என்ற புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார். கடந்த ஜூலை மாதம் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்று மருந்துச்சீட்டுடன், திவ்யா வீட்டில் வைத்து தன்னுடன் வாக்குவாதம் செய்த வீடியோக்களையும் எடிட் செய்து வெளியிட்டார் அர்னவ்

வீடியோவில் திவ்யா மன உளைச்சலில் பேசும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. பஞ்சு தலையனையால் மனைவி செல்லமாக தட்டியதை கூட செல்லம்மா ஹீரோ தன் மீது நடந்த தாக்குதல் என்று கூறுவது போன்ற காமெடி காட்சிகள் எல்லாம் அந்த வீடியோவில் இடம் பெற்று இருந்தது..

மன நலம் பாதிக்கப்பட்டதற்கு ஜூலை 12 ந்தேதி , திவ்யா சிகிச்சை எடுத்துக் கொண்டதாக அர்னவ் கூறும் நிலையில் , மனநலம் பாதிக்கப்பட்ட திவ்யா எப்படி கர்ப்பிணியானார் ? என்றும் அர்னவ் கூறுவது போல திவ்யா மன நிலை சரியில்லாமல் இருந்த போது பலாத்காரம் செய்யப்பட்டாரா ? என்றும் திவ்யா தரப்பினர் எதிர் கேள்வி எழுப்பி இருந்தனர். அர்னவ்விடம் உள்ள வீடியோக்கள் அனைத்தையும் கைப்பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் போலீசுக்கு திவ்யா கோரிக்கை விடுத்தார்...

இந்த நிலையில் அர்னவ் மீது எஸ்.ஆர்.எம்.சி போலீசார் கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து கொடுமைப்படுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்திலும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய குற்றச்சாட்டு குறித்தும் போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்...

போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து சீரியல் ஹீரோ அர்னவ் மனைவியின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.


Advertisement
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்
நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு.. நடிகை ரோகிணி அளித்த புகார் - மருத்துவர் காந்தராஜ் மீது பாய்ந்த வழக்கு..!
விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத்.. 2025 அக்டோபரில் படத்தை வெளியிட திட்டம்..
தொழில் துறைக்கு ஒரு நேர்மையான முன்னுதாரணம் நடிகர் சங்கம்:தனுஷ்
விஜய் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகள் 21 கேள்விகளுக்கு பதிலளித்த த.வெ.க 85 ஏக்கரில் தயாராகும் மாநாட்டு இடம்
திரைப்படத்துறையை ஊத்திமூட முயற்சி நடப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் புகார்
மலையாள நடிகரும் ஜெயிலர் படம் வில்லனுமான விநாயகன் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது.
கோவையில் The G.O.A.T படத்தைக் காண வந்த நடிகர் சிவகார்த்திகேயன்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement