செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரத்தம் ரணம் ரவுத்ரம் ரசிகர்கள் ரகளை..! துப்பாக்கிலாம் கொண்டு வர்ராங்கப்பா..!

Mar 26, 2022 06:43:34 AM

விஜயவாடாவில் உள்ள திரையரங்கு ஒன்றில் தொழில் நுட்பகோளாரால் டிரிபிள் ஆர் படம் பாதியில் நின்று போனதால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் திரையரங்கை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

பாகுபலிக்கு பின்னர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் பிரமாண்ட படைப்பான ரத்தம் ரணம் ரவுத்ரம் டிரிபிள் ஆர் படம் உலகமெங்கும் வெளியானது.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்புடன் டிரிபிள் ஆர் படம் திரையிட்ட திரையரங்குகள் ஆந்திராவில் அதகளப்பட்டது.

டிரிபிள் ஆர் படம் 5 மொழிகளில் வெளியிடப்பட்டாலும் தெலுங்கு ரசிகர்களின் உற்சாகத்தால் அங்குள்ள திரையரங்குகள் அல்லோகலப்பட்டது.

விஜயவாடா நகரில் உள்ள அன்னபூர்ணா திரையரங்கில் டிரிபிள் ஆர் படம் திரையிடப்பட்ட நிலையில் , தொழில் நுட்ப கோளாரால் பாதியில் படம் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர்.

போலீசார் வரவழைக்கபட்டு சிறப்பு கவனிப்போடு ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை அனுப்பி வைத்தனர்.

அதே போல கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெத்தாபுரத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் டிரிபிள் ஆர் திரைப்படத்தை காண கையில் துப்பாக்கியுடன் வந்த ரசிகர் ஒருவர் திரைக்கு முன்னால் நின்று போஸ் கொடுத்து கெத்து காட்டினார்.

இதையடுத்து பீதியடைந்த ரசிகர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் துப்பாக்கியுடன் நின்ற ஆசாமியை பிடித்து விசாரித்தனர்.

விசுவஹிந்து பரிசத் அமைப்பை சேர்ந்த அவர் தனது பாதுகாப்புக்கு என்று உரிமம் பெற்று துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், அதனை பொது இடத்தில் மற்றவர்களை அச்சுருத்தும் வகையில் கையில் தூக்கிப்பிடித்ததால் அவரது துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

மொத்தத்தில் ரத்தம் ரணம் ரவுத்ரம் படத்தின் வெளியீட்டால் ரசிகர்கள் செய்த ராவடி மற்றும் ரகளையால், சில திரையரங்கு உரிமையாளர்கள் திக் திக் மன நிலையிலேயே காணப்பட்டனர்.


Advertisement
தி கோட் வெற்றி: பிரேம்ஜி சாமி தரிசனம்
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்
நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு.. நடிகை ரோகிணி அளித்த புகார் - மருத்துவர் காந்தராஜ் மீது பாய்ந்த வழக்கு..!
விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத்.. 2025 அக்டோபரில் படத்தை வெளியிட திட்டம்..
தொழில் துறைக்கு ஒரு நேர்மையான முன்னுதாரணம் நடிகர் சங்கம்:தனுஷ்
விஜய் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகள் 21 கேள்விகளுக்கு பதிலளித்த த.வெ.க 85 ஏக்கரில் தயாராகும் மாநாட்டு இடம்
திரைப்படத்துறையை ஊத்திமூட முயற்சி நடப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் புகார்
மலையாள நடிகரும் ஜெயிலர் படம் வில்லனுமான விநாயகன் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது.

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement