செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒ சொல்றியா… ஆபாச பாடல் தேசிய கீதமாம்..! கலைப்புலி தாணு சொல்கிறார்

Dec 15, 2021 08:03:25 AM

புஷ்பா படத்தில் ஆண்களை இழிவுபடுத்தும் விதமாக எழுதப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்குள்ளான, ஓ சொல்றியா என்ற பாடல் குழந்தைகள் மற்றும் பட்டி தொட்டியில் இருக்கும் இளைஞர்களின் தேசியகீதமாக வலம் வரபோகின்றது என்று கலைப்புலி தாணு பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது .

அல்லுஅர்ஜூன் நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ள புஷ்பா படத்தில் இடம் பெற்றுள்ள ஓ சொல்றியா என்ற பாடல், பெண்கள் எப்படி இருந்தாலும் அவர்களை ஆண்கள் தவறான எண்ணத்துடன் மட்டுமே பார்ப்பார்கள் என்ற அர்த்தம் தொனிக்க எழுதப்பட்டுள்ளது. விவேகா எழுதியுள்ள இந்த பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியுள்ளார்.

இதற்கு ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆண்கள் சங்கம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சமந்தா நடனம ஆடியுள்ள சம்பந்தப்பட்ட பாடலை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் புஷ்பா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தெலுங்கில் படம் எடுத்தாலும் நடிகர் அல்லு அர்ஜுன் தமிழ்நாட்டில் பிறந்த மகன் தமிழால் உயர்ந்த மகன் என்று புகழ்ந்தார்.

ஓ சொல்றியா பாடல் பற்றி குறிப்பிட்டு பேசிய தாணு, ஓ வர்ரியா... ஓ ஓ மாமா வர்ரியா என்று பாடல் வரியை தவறாகவும் இன்னும் கொச்சையாகவும் பாடிக் காட்டியதோடு, அந்த பாடல் குழந்தைகளுக்கும், பட்டிதொட்டியில் இருக்கும் இளைஞர்களுக்கு எல்லாம் தேசிய கீதமாக அகிலமெங்கும் வர போகிறது என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆபாச பாடலை தேசிய கீதத்துடன் ஒப்பிட்டு பேசியதற்கு கலைப்புலி தாணுவுக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஓ சொல்றியா... பாடலுக்கு பதில் அடி கொடுப்பதாக நினைத்து , அதே மெட்டில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக விபரீத சிந்தனையில் எழுதப்பட்ட பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் ஓ சொல்றியா பாடலில் வருகின்ற ஒரு வரியை 2004 ஆம் ஆண்டிலேயே, தனது 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் செல்வராகவன் வசனமாக வைத்து விட்டதாக கூறி பாடலாசிரியர் விவேகாவின் கவிதை திருட்டையும் போட்டு உடைத்துள்ளனர்.

ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் எதிர்ப்பு ஒரு பக்கம் , சமூக வலைதளங்களில் வருத்தெடுக்கும் நெட்டிசன்கள் மறுபக்கம் என்று புஷ்பா படத்தை சுற்றி சர்ச்சைகள் வேகமாக வட்டமடிக்க தொடங்கி உள்ளது.


Advertisement
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்
நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு.. நடிகை ரோகிணி அளித்த புகார் - மருத்துவர் காந்தராஜ் மீது பாய்ந்த வழக்கு..!
விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத்.. 2025 அக்டோபரில் படத்தை வெளியிட திட்டம்..
தொழில் துறைக்கு ஒரு நேர்மையான முன்னுதாரணம் நடிகர் சங்கம்:தனுஷ்
விஜய் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகள் 21 கேள்விகளுக்கு பதிலளித்த த.வெ.க 85 ஏக்கரில் தயாராகும் மாநாட்டு இடம்
திரைப்படத்துறையை ஊத்திமூட முயற்சி நடப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் புகார்
மலையாள நடிகரும் ஜெயிலர் படம் வில்லனுமான விநாயகன் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது.
கோவையில் The G.O.A.T படத்தைக் காண வந்த நடிகர் சிவகார்த்திகேயன்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement