செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காத்துவாக்குல ரெண்டு காதலால் விவாகரத்து.. சமந்தா நிபந்தனையால் பிரிந்த கணவன்..!

Oct 03, 2021 02:15:20 PM

நடிகை சமந்தா - கணவர் நாக சைதன்யா ஆகிய இருவரும் சுமூகமாக பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக தான் நடித்துவரும் படங்களை கைவிட மறுத்த சமந்தா, காதல் கணவனை கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பல்லாவரத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து திருமண வரவேற்பு பெண்ணாக வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை சமந்தா. திரை உலகில் நுழைந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களிலும் முன்னனி நடிகையானார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டதால், தெலுங்கு திரைஉலகின் பாரம்பரியமான நடிகர் நாகார்ஜூனா அக்கினேனி குடும்பத்து மருமகளானார்.

திருமணத்துக்கு பின்னரும் சமந்தாவின் மார்க்கெட் ஏறுமுகத்தில் இருந்ததால் தொடர்ந்து படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு நாயகியாக நடித்து வந்தார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இருவரும் சுமூகமாக பிரிவதாக அறிவித்துள்ளனர். இந்த பிரிவு துரதிர்ஷ்டவசமானது என்றும் சமந்தாவுக்கு தொடர்ந்து தங்கள் குடும்பத்தின் ஆதரவு உண்டு என்றும் நாகர்ஜூனா டுவிட் செய்துள்ளார்.

சமந்தாவை நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டபோதே அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், கைவசம் உள்ள 7 படங்களை மட்டுமே நடித்து முடித்து விடுவதாக சமந்தா கூறியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் வாக்குறுதி அளித்தபடி நடக்காமல், தொடர்ந்து புதிய படங்களை ஒப்புக் கொண்டு சமந்தா நடித்து வந்ததால், நாக சைத்தன்யா அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்தும் அக்கினேனி குடும்பத்துக்கு வாரிசு ஒன்றை பெற்றுக் கொடுக்கும் பக்குவத்துக்கு சமந்தா வராததால் குடும்பத்திலும் புகைச்சல் கிளம்பியதாக தகவல்கள் உலா வந்தன. இந்த நிலையில் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள சமந்தா சில நிபந்தனைகளை விதித்ததோடு நாக சைதன்யா குடும்பத்துக்கு சொந்தமான, பல நூறுகோடி ரூபாய் மதிப்புள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் அன்னபூர்னா ஸ்டூடியோ ஆகியவற்றில் தன்னையும் ஒரு பங்குதாரராக சேர்க்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாகவும் இதனால் அவர்களுக்கிடையே விரிசல் அதிகரித்ததாகவும் கூறப்படுகின்றது.

இதற்கிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் "காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்தில் நடிக்க நாகசைதன்யா தடை போட்டதாகவும், அதையும் மீறி சமந்தா நயன்தாராவுடன் சேர்ந்து 2 வது நாயகியாக நடித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. மேலும் அமலாவின் கேரக்டரை இமிடேட் செய்யும் வளையோசை பாடலில் விஜய்சேதுபதியுடன் ஜோடியாக பேருந்தில் செல்லும் வீடியோ காட்சி வெளியானதால் குடும்பத்தில் பெரும் பிரச்சனை உருவானதாக கூறப்படுகின்றது.

திரை உலகில் இப்படிப்பட்ட பேச்சுகள் அடிபட்டாலும், தன் திறமை மற்றும் உழைப்பின் மீதும் பெரும் நம்பிக்கை உள்ளதால் ஒரு பைசா கூட ஜீவனாம்சம் வேண்டாம் என்றும் விவாகரத்துக்கு பின்னரும் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருப்பேன் என்று கெத்தாக கூறி சமந்தா, கணவர் நாகசைதன்யாவை பிரிந்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர் சமந்தாவின் நண்பர்கள்..!

சாதாரண குடும்பத்து பெண்ணான சமந்தா, அக்கினேனி குடும்பத்தினரின் கட்டுப்பாடுகளை ஏற்காததால் இறுதியில் மணவாழ்க்கையில் முறிவு ஏற்பட்டதாக விபரம் அறிந்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பிரிந்தாலும் நட்பாக பழகுவது நடிகர் நடிகைகளுக்கு ஒன்றும் பெரிய விஷயமில்லை, திரைக்கு பதில் நிஜத்தில் நடிக்கவேண்டியது தான்..!

 


Advertisement
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்
நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு.. நடிகை ரோகிணி அளித்த புகார் - மருத்துவர் காந்தராஜ் மீது பாய்ந்த வழக்கு..!
விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத்.. 2025 அக்டோபரில் படத்தை வெளியிட திட்டம்..
தொழில் துறைக்கு ஒரு நேர்மையான முன்னுதாரணம் நடிகர் சங்கம்:தனுஷ்
விஜய் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகள் 21 கேள்விகளுக்கு பதிலளித்த த.வெ.க 85 ஏக்கரில் தயாராகும் மாநாட்டு இடம்
திரைப்படத்துறையை ஊத்திமூட முயற்சி நடப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் புகார்
மலையாள நடிகரும் ஜெயிலர் படம் வில்லனுமான விநாயகன் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது.
கோவையில் The G.O.A.T படத்தைக் காண வந்த நடிகர் சிவகார்த்திகேயன்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement