செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வாழ்வாதாரம் இழந்த.. மெல்லிசைக் கலைஞர்கள்..!

Jun 09, 2020 08:58:39 AM

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு பல தொழில்கள் செயல்பட தொடங்கிவிட்டன. ஆனால், திருவிழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் தங்களது வருமானத்திற்கு வழி தேடிக் கொள்ளும் மேடை மெல்லிசை கலைஞர்கள், எதிர்வரும் பல மாதங்களுக்கு வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

1980-களில் பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் கதாநாயகன் மேடை கச்சேரி பாடகராக தான் இருப்பார்.

அந்த அளவிற்கு தமிழ் திரையுலகில் மேடை கச்சேரிக்கும், மெல்லிசை கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் இருந்தது. 

தமிழ் திரையிசை பாடல்களை பிரதியெடுத்து நகலிசை விருந்து படைக்கும் மேடை மெல்லிசை கலைஞர்கள், கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கால் எந்த வருமானமும் இன்றி தவிப்பதாக கூறுகின்றனர்

திருமணம், திருவிழா போன்ற நிகழ்ச்சிகளை நம்பி தமிழகம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் மெல்லிசை கலைஞர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களுக்கு சீசன் மாதங்களில் கிடைக்கும் வருமானமே ஆண்டு முழுவதற்குமான வாழ்வாதாரம் என்ற நிலையில், ஊரடங்கால் தற்போது வீட்டின் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் இசை கருவிகளை போல மவுனமாக இருப்பதை தவிர வேறு வழியில்லை என்கின்றனர்.

பொருளாதார ரீதியாக பாதிப்படைந்த பல்வேறு தொழில் சார்ந்தோருக்கு அரசு நிவாரணம் வழங்கிய நிலையில், மெல்லிசை கலைஞர்களுக்கும் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்கிறார் மேடை மெல்லிசை கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும், லஷ்மன் ஸ்ருதி மெல்லிசை குழுவின் நிறுவனருமான லஷ்மணன். 

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கோயில்கள் இன்னும் திறக்கப்படவில்லை. வரும் நாட்களில் திறக்கப்பட்டாலும் திருவிழா, கச்சேரி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அடுத்த சில மாதங்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்பில்லை. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் வீட்டிலேயே அதிகபட்சம் 50 பேரோடு நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால் இசை நிகழ்ச்சிகளை நம்பி தங்களது வாழ்வாதாரத்தை அமைத்து கொண்ட மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு அரசு தற்காலிக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்
நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு.. நடிகை ரோகிணி அளித்த புகார் - மருத்துவர் காந்தராஜ் மீது பாய்ந்த வழக்கு..!
விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத்.. 2025 அக்டோபரில் படத்தை வெளியிட திட்டம்..
தொழில் துறைக்கு ஒரு நேர்மையான முன்னுதாரணம் நடிகர் சங்கம்:தனுஷ்
விஜய் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகள் 21 கேள்விகளுக்கு பதிலளித்த த.வெ.க 85 ஏக்கரில் தயாராகும் மாநாட்டு இடம்
திரைப்படத்துறையை ஊத்திமூட முயற்சி நடப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் புகார்
மலையாள நடிகரும் ஜெயிலர் படம் வில்லனுமான விநாயகன் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது.
கோவையில் The G.O.A.T படத்தைக் காண வந்த நடிகர் சிவகார்த்திகேயன்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement