அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஜார்ஜ்டவுன் 15-ஆவது குற்றவியல் நீதிபதி முரளிகிருஷ்ணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடந்து முடிந்த வாக்குப்பதிவின் போது திமுக நிர்வாகி மீது தாக்குதல், உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஜெயகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் பட்டினப்பாக்கம் இல்லத்திலிருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர் எழும்பூர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டார். அவரது வழக்கை விசாரித்த ஜார்ஜ்டவுன் 15-ஆவது குற்றவியல் நீதிபதி முரளிகிருஷ்ணா 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும் ஜாமீன் மனு நாளை விசாரிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் பூந்தமல்லி கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.