2ஜி வழக்கில் கையாலாகாத தனத்தால் காங்கிரஸ் விலகிவிட்டதாகவும், அதன் பின்னர் வழக்கைத் தானே எதிர்கொண்டதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசினார்.
2ஜி வழக்கு பாஜகவுக்கு மிகப்பெரிய அறுவடை என்பதால், அவர்கள் மேல்முறையீடு செய்வார்கள் என்றும், அதை எதிர்கொள்ளத் தான் தயாராக இருப்பதாகவும் ஆ.ராசா தெரிவித்தார்.