தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்று வரும் வேல் யாத்திரையின் நிறைவு விழாவில் அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய பிரதேச மாநில முதலமைச்சருமான சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக வேல் யாத்திரை ரத்து செய்யப்பட்ட சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களில் வருகிற 5-ம் தேதியன்று தரிசனம் நடைபெறும் என்றும், வேல் யாத்திரையின் நிறைவு விழா 7-ம் தேதியன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.