செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

தேசியக் கொடியை தூக்கி வீசிய எஸ்.ஐ.! இடமாற்றம் செய்த காவல் ஆணையர்..!

Oct 23, 2023 08:18:42 PM

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்குள் ரசிகர்கள் எடுத்துச் செல்ல முயன்ற தேசியக் கொடியை பிடுங்கி வீசிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் சென்னையில் மோதின. இதற்கு முன் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதிய போட்டியின் போது மைதானம் வெறிச்சோடி இருந்த நிலை போல இல்லாமல், இந்த போட்டியைக் காண 16 ஆயிரம் பேர் வந்திருந்தனர்.

போட்டியைக் காண கருப்பு டி-ஷர்ட் அணிந்து வந்தவர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் வெளியே விற்பனை செய்யப்பட்ட பாகிஸ்தான் அணி ஜெர்ஸியை வாங்கி அணிந்து கொண்டு அவர்கள் உள்ளே சென்றனர்.

மைதானத்திற்குள் ரசிகர்கள் சிலர் எடுத்துச் செல்ல முயன்ற இந்திய தேசியக் கொடியை பிரதான வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் கைப்பற்றி தூக்கி வீசினார்.

ரசிகர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து கொடியை சுருட்டி சிறிது நேரம் கையில் வைத்திருந்த எஸ்.ஐ. நாகராஜன், பின்னர் அதை காவல் துறை வாகனத்தில் வைத்துக் கொண்டார்.

காவல் அதிகாரியின் இந்த செயலுக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

கொடியை அவமதித்த எஸ்.ஐ. நாகராஜனை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்திருப்பதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியுள்ளார். மைதானத்துக்குள் இந்தியக் கொடி அனுமதிக்கப்பட்டதாகக் கூறி புகைப்படங்களை பகிர்ந்துள்ள காவல் ஆணையர், பாலஸ்தீனம் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் போட்டி நடக்கும் மைதானத்திற்குள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று தகவல் கிடைத்ததால், சர்ச்சைக்குரிய கொடிகள் மற்றும் பதாகைகளை மட்டுமே பறிமுதல் செய்ய உத்தரவிட்டப்பட்டு இருந்ததாகவும், எஸ்.ஐ. நாகராஜன் ஏன் தேசியக் கொடிகளை பறிமுதல் செய்தார் என்று துறைரீதியாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். உடைக் கட்டுப்பாடு எதையும் தாங்கள் விதிக்கவில்லை என்றும் காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார்.


Advertisement
திண்டிவனத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் போட்டி 19ஆம் தேதி துவக்கம்... ஒருமுறை எடுக்கும் டிக்கெட்டை 5 நாளும் பயன்படுத்தலாம்
பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற மாரியப்பன்.. அரசு சார்பில் உற்சாக வரவேற்பு..
பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு
4-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கிவைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமெரிக்கா கோப்பைக்கான பாய்மர படகு போட்டியில் அரையிறுதிக்கு பிரிட்டன் அணி தகுதி
பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் 400 மீ. ஓட்டம் - 29 ஆண்டு சாதனை முறியடிப்பு
பாரா ஒலிம்பிக் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீக்கு உற்சாக வரவேற்பு
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற 3 தமிழக வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
பாராலிம்பிக் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்றது உக்ரைன்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement