இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி இந்திய அணி முன்னேறி வருகிறது.
2ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்து இருந்தது. தொடர்ந்து 4ஆம் நாளில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் 109 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். முடிவில் இங்கிலாந்து அணி 2ஆவது இன்னிங்சில் 85 புள்ளி 5 ஓவருக்கு 303 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்திய வீரர் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது. இந்திய அணி இன்னும் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும்.