செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இந்த படை போதுமா... இன்னும் அடி வேணுமா? இலங்கையை சுளுக்கெடுத்த இந்திய கிரிக்கெட் அணி

Jul 20, 2021 02:27:34 PM

 

இரண்டாம் தர அணியை அனுப்பியிருப்பதாக விமர்சித்த அர்ஜூனா ரணதுங்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் இலங்கை அணியை அடித்து துவைத்து எடுத்து விட்டனர்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று ஃபார்மெட்டுகளுக்கும் கேப்டன் விராட் கோலிதான். தற்போது, இங்கிலாந்தில் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக முகாமிட்டுள்ளது.

அதே நேரத்தில் ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தப்படி அந்த நாட்டு அணியுடன் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இந்தியா தீர்மானித்தது. ஷிகர் தவானை கேப்டனாகவும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரன ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்து, இலங்கைக்கு இந்திய அணி அனுப்பி வைக்கப்பட்டது.

23 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக இந்திய அணி ஒருநாள் போட்டிக்கு ஒரு அணியையும் டெஸ்ட் போட்டிக்கு மற்றோரு அணியையும் சர்வதேச போட்டியில் பங்கேற்க வைப்பது இதுதான் முதன்முறை. முன்னதாக 1998 ஆம் ஆண்டு அஜய் ஜடேஜா தலைமையில் மலேசியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிக்கு ஒரு அணியையும் கனடாவில் டொரோன்டா நகரில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்க முகமது அசாருதீன் தலைமையிலான மற்றோரு அணியும் அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் , இலங்கைக்கு வந்த அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா,  அஸ்வின் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாததால், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா கோபமடைந்தார். இலங்கைக்கு வந்திருப்பது இந்தியாவின் இரண்டாம் தர அணி என அர்ஜூனா ரணதுங்கா விமர்சித்தார். அதற்கு, இந்திய ரசிகர்கள் முதலில் , இந்த அணியை உங்களால் வெல்ல முடியுமா... வென்று காட்டி விட்டு பேசுங்கள் என்று சமூகவலைத்தளத்தில் பதிலடி கொடுத்தனர்.

இந்த நிலையில், ரணதுங்காவின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அணியின் இளம் வீரர்கள் முதல் ஒருநாள் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி இலங்கையை தோற்கடித்தனர். கொழும்பில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 262 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் அதிரடியாக ஆட 36.4 ஓவர்களிலேயே 263 ரன்களை அடித்து அபாராமாக வென்றது.

கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்களையும் பிரித்வி ஷா, 24 பந்துகளில் 43 ரன்களையும் அறிமுக வீரரான இஷான் கிஷான் 59 ரன்களையும் அதிரடியாக குவித்தனர்.இந்திய அணியின் வெற்றியை அடுத்து, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் இந்திய வீரர் பிரித்வி ஷாவை மனம் திறந்து பாராட்டியுள்ளார். முரளிதரன் கூறுகையில், பிரித்வி ஷா அச்சமற்ற கிரிக்கெட்டை ஆடக் கூடியவர் என்றும் அவரை நீண்ட நேரம் களத்தில் வைத்திருந்தால், எதிரணிக்கு டேஞ்சர்தான் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இஷான் கிஷனும் பிரித்வி ஷா போலவே ஆடினார் என்றும் 10 ஒவர்களில் 90 ரன்கள் என்பது அசாத்தியமான தொடக்கம் என்றும் இலங்கை பந்துவீச்சாளர்களிடத்தில் விக்கெட்டுகள் வீழ்த்தும் நோக்கமே இல்லை என்றும் முரளிதரன் குற்றம் சாட்டினார்.மேலும், இலங்கை அணியின் பந்து வீச்சு சாதாரணமாக சராசரிக்கும் கீழ் இருந்தது என்றும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் உலகத்தரமான பவுலர்களையே பிரித்வி ஷா, இஷான் கிஸான் போன்றவர்கள் அடித்து விளாசியிருக்கிறார்கள் என்றும் அதனால், இலங்கை பந்துவீச்சாளர்களை, இந்திய பேட்ஸ்மேன்கள் சீரியசாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்றும் முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

 


Advertisement
திண்டிவனத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் போட்டி 19ஆம் தேதி துவக்கம்... ஒருமுறை எடுக்கும் டிக்கெட்டை 5 நாளும் பயன்படுத்தலாம்
பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற மாரியப்பன்.. அரசு சார்பில் உற்சாக வரவேற்பு..
பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு
4-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கிவைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமெரிக்கா கோப்பைக்கான பாய்மர படகு போட்டியில் அரையிறுதிக்கு பிரிட்டன் அணி தகுதி
பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் 400 மீ. ஓட்டம் - 29 ஆண்டு சாதனை முறியடிப்பு
பாரா ஒலிம்பிக் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீக்கு உற்சாக வரவேற்பு
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற 3 தமிழக வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
பாராலிம்பிக் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்றது உக்ரைன்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement