செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் இத்தாலி அணி வெற்றி..! பரபரப்பான இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது

Jul 12, 2021 06:50:50 AM

யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி, இத்தாலி அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 53 ஆண்டுகளுக்கு பின் இத்தாலி அணிக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

லண்டன் வெம்பிளே மைதானத்தில் நடந்த 16-வது யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

உள்ளூர் ரசிகர்கள் வெள்ளத்தில் களமிறங்கிய நிலையில், ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து வீரர் Luke Shaw கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார். முதல் பாதி ஆட்டத்தில் எவ்வளவோ முயன்றும் இத்தாலி அணி வீரர்களால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.

67-வது நிமிடத்தில் இத்தாலி வீரர் Leonardo Bonucci பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். தொடர்ந்து இரு அணியினரும் அடுத்த கோல் அடிக்காத நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது.

கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 3-க்கு 2 என்ற கோல் வித்தியாசத்தில் இத்தாலி அணி வெற்றது.

வெற்றி பெற்ற இத்தாலி அணிக்கு யூரோ கோப்பை வழங்கப்பட்டது. 1968ம் ஆண்டுக்குப்பின் அந்த அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவது இதுவே முதன்முறை என்பதால் வீரர்கள் உற்சாகமடைந்தனர்.

கடைசி வரை போராடியும் கோப்பையை வெல்ல முடியாததால் சோகத்தில் ஆழ்ந்த இங்கிலாந்து அணி வீரர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி ஆறுதல் கூறிக்கொண்டனர். போட்டியைக் காண வந்த இளவரசர் வில்லியம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உள்ளூர் ரசிகர்கள் மைதானத்தில் ஏமாற்றத்துடன் காணப்பட்டனர்.


Advertisement
திண்டிவனத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் போட்டி 19ஆம் தேதி துவக்கம்... ஒருமுறை எடுக்கும் டிக்கெட்டை 5 நாளும் பயன்படுத்தலாம்
பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற மாரியப்பன்.. அரசு சார்பில் உற்சாக வரவேற்பு..
பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு
4-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கிவைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமெரிக்கா கோப்பைக்கான பாய்மர படகு போட்டியில் அரையிறுதிக்கு பிரிட்டன் அணி தகுதி
பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் 400 மீ. ஓட்டம் - 29 ஆண்டு சாதனை முறியடிப்பு
பாரா ஒலிம்பிக் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீக்கு உற்சாக வரவேற்பு
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற 3 தமிழக வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
பாராலிம்பிக் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்றது உக்ரைன்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement