செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 813 ஆக உயர்வு...

Feb 09, 2020 07:03:51 PM

சீனாவில் கொரானா வைரசுக்கு ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்ததை அடுத்து,  பலி எண்ணிக்கை 813 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது சார்ஸ் வைரஸால் முன்பு ஏற்பட்ட உயிர் பலி எண்ணிக்கையைவிட அதிகமாகும்.

சீனாவின் ஹூபே மாகாணம் வூகானில் இருந்து பல்வேறு பகுதிகளிலும் கொரானா வைரஸ் பரவியுள்ளது. சீனாவுக்கு சென்று திரும்பிய பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, தைவான், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சிலருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சீனாவுக்கு செல்வதை தவிர்க்கும்படி தங்களது நாட்டு மக்களை பல்வேறு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், சீனாவில் ஹூபே மாகாணத்தை சேர்ந்த 2,147 பேர் உள்ளிட்ட 2656 பேருக்கு சனிக்கிழமை ஒரே நாளில் கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சீனாவில் ஒரே நாளில் கொரானா வைரசுக்கு 89 பேர் பலியாகினர். இதில் ஹூபே மாகாணத்தில் அதிகப்பட்சமாக 81 பேர் உயிரிழந்தனர். இதனால் சீனாவில் மட்டும் கொரானா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 811-ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவரும், சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஹாங்காங் சுயாட்சி பகுதியில் ஒருவரும் கொரானா வைரஸால் ஏற்கெனவே பலியாகியுள்ளனர். இவர்களோடு சீனாவில் பலியான 811 பேரையும் சேர்த்தால் உலகில் கொரானா வைரஸுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 813 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல, புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்ட 2656 பேரையும் சேர்த்து, சீனாவில் மொத்தம் 37,198 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி, ஹூபே மாகாணத்தை சேர்ந்த 2,067 பேர் உள்பட புதிதாக 3,916 பேருக்கு கொரானா வைரஸ் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சீன சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு இருப்போருடன் தொடர்பு வைத்திருந்ததாக 3 லட்சத்து 71 ஆயிரத்து 905 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 183 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து கடந்த 2002-2003ம் ஆண்டில் பரவிய சார்ஸ் வைரஸால் நேரிட்ட நோய்க்கு மொத்தம் 774 பேர் பலியாகியிருந்தனர். அந்த எண்ணிக்கையை கொரானா வைரஸ் பலி எண்ணிக்கை தற்போது தாண்டியுள்ளது.


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement