பெருகி வரும் எதிர்ப்பு, படர்ந்து வரும் காட்டுத் தீயின் தாக்கம் ஆகிய சவால்களையும் தாண்டி, ஆஸ்திரேலியாவில் தனது நிலக்கரிச் சுரங்கத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அதானி குழுமம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை துவக்கியதில் இருந்தே பருவமாற்ற எதிர்ப்பு ஆர்வலர்கள் அதானிக்கு எதிராக போராடி வருகின்றனர். திட்டத்தை செயல்படுத்தும் ஜெர்மனியின் சீமென்ஸ் நிறுவனத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் நடக்கின்றன.
இந்த நிலையில் வரலாறு காணாத காட்டுத் தீயால் ஆஸ்திரேலியா பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. ஆனாலும், இந்தியாவின் மின் உற்பத்திக்கு அடிப்படை ஆதாரம் என்பதால் நிலக்கரி வெட்டும் திட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என அதானியும், சீமென்சும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.