செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

அமெரிக்கா அதிரடி தாக்குதல்..!

Jan 03, 2020 09:54:21 PM

ஈரானின் முக்கிய ராணுவ தளபதி காஸிம் சுலைமானி, அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன் மூலம் வளைகுடா நாடுகளில் இன்னமும் தனது வலிமை குறையவில்லை என்பதை அமெரிக்கா வெளிப்படுத்தி உள்ளது.

ஈரானின் குத்ஸ் படைப்பிரிவு தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் காஸிம் சுலைமானி, சிரியாவில் இருந்து ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து அவர் வெளியேறிய வாகனம் மீது  நடந்த அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் காஸிம் சுலைமானியும் அவரோடு இருந்த சிலரும்  கொல்லப்பட்டனர்.

பாக்தாதில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அதிபர் டிரம்ப், தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. . ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை தாக்க காசிம் சோலிமானி திட்டமிட்டதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

இதனிடையே  அமெரிக்காவின் செயலுக்கு பழிவாங்கப் போவதாக ஈரான் மிரட்டியுள்ளது.அமெரிக்க  எதிர்ப்பை  ஈரான் மேலும் தீவிரப்படுத்தும் என்று அதிபர் ஹஸன் ரவுஹானி கூறியுள்ளார். அமெரிக்க எதிர்ப்பு இஸ்லாமிய நாடுகள் இதற்கான பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஈரானின் புரட்சிகர படை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சுலைமானி விவகாரத்தை தொடர்ந்து கச்சா எண்ணைய் விலை பீப்பாய்க்கு 3 டாலர் அதிகரித்துள்ளது. ஈரான் போர் நடவடிக்கைகளை துவக்குமானால் இந்த விலை உயர்வு பல மடங்கு அதிகரிக்கும். அதே சமயம் சுலைமானியைப் போன்று இந்தப் பிராந்தியத்தில் தாக்குதல் போர் உத்திகளை வகுக்க இனிமேல் ஈரானால் இயலுமாஎன்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கொல்லப்பட்ட காஸிம் சுலைமானியின் உடல் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஈராக்கில் உள்ள அந்நாட்டு தூதுவர் தெரிவித்துள்ளார்.

 


Advertisement
சீன மின்சார கார்களுக்கு 37.6 சதவீதம் வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
லெபனான் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை... ஒரே நாளில் 35 குழந்தைகள் உள்பட 492 பேர் பலி
சீனாவில் நடைபெறும் அறுவடைத் திருவிழா
இந்தியாவில் முதலீடு - அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இலங்கையின் புதிய அதிபராகிறார் அனுரா குமார திசநாயக்கே!
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
ரஷ்யாவுடனான போரின் முடிவு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் கைகளில் உள்ளது - ஜெலன்ஸ்கி
அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா

Advertisement
Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...


Advertisement