செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வெடித்த போராட்டம்... வெளியேறிய ஷேக் ஹசீனா! வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி! ஹசீனா தஞ்சமடைவது எங்கே? அமைதி திரும்புமா?

Aug 06, 2024 10:03:51 AM

வங்கதேசத்தில் திடீர் திருப்பமாக, 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அந்நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

வங்கதேசத்தில் அரசு பணிகளில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 % ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் வெடித்த போராட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அந்நாட்டு உச்சநீதிமன்றம் தலையிட்டு இந்த இடஒதுக்கீட்டை 5 சதவிதமாக குறைத்ததால் கடந்த 2 வாரங்களாக அங்கு அமைதி நிலவியது. ஆனால், போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என ஷேக் ஹசீனா கூறியதால், ஞாயிறன்று டாக்காவில் பெரும் வன்முறை, தீவைப்பு சம்பவங்களில் 13 போலீசார் உட்பட 98 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு செல்ஃபோன் சேவை முடக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் இல்லம் அமைந்துள்ள வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் புகுந்ததால், ஷேக் ஹசீனா ராணுவ ஹெலிகாப்டரில் தனது சகோதரியுடன் தப்பினார். பிரதமர் அலுவலகத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள், ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேச விடுதலைக்கு வித்திட்டவருமான முஜிபுர் ரகுமானின் சிலையையும் சேதப்படுத்தினர்.

திடீரென ஏற்பட்ட அசாதாரண நிலையால், ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக அந்நாட்டு ராணுவத் தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவித்தார். வன்முறையை கைவிட்டு இடைக்கால அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என போராட்டக்காரர்களுக்கு ராணுவத் தளபதி வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக வங்கதேசத்தை ஆட்சி செய்து வந்த ஷேக் ஹசீனா, திரிபுரா மாநிலம் அகர்தலா வந்தடைந்ததாகவும், லண்டனுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய செய்தி வெளியானதும் டாக்கா நகர வீதிகளில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்
டிரம்பை சுட முயன்றவருக்கு உடந்தை யார்? போலீசார் தீவிர விசாரணை
சீனாவின் ஷாங்காய் நகரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய பெபின்கா சூறாவளி

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement