செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

வங்க தேசத்தில் இட ஒதுக்கீடு விவகாரம் 105 பேர் உயிரிழப்பு - சட்டம் ஒழுங்கை காக்க ராணுவம் வரவழைப்பு

Jul 20, 2024 07:25:19 AM

வங்க தேசத்தில் மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல் பெரும் கலவரமாக மாறியுள்ளது. 105 பேர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டாக்கா, சிட்டோகிராம், ரங்பூர், குமில்லா உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் டாக்காவில் பொதுக்கூட்டம், ஊர்வலம் உள்ளிட்டவை நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.

நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள சிறைக்கு கைதிகள் தீவைத்தனர். நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வங்கதேசத்தில் படித்துவந்த இந்திய மாணவர்களில் 300-க்கும் மேற்பட்டோர் நாடு திரும்பியுள்ளனர். அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டை ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கொண்டு வந்தது. இந்த இட ஒதுக்கீடு பாரபட்சமானது என்றும், சமூகத்தில் ஒரு பிரிவினருக்கு அதிகப் பலன் அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி, ஜூலை ஒன்றாம் தேதி முதல் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


Advertisement
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்
டிரம்பை சுட முயன்றவருக்கு உடந்தை யார்? போலீசார் தீவிர விசாரணை
சீனாவின் ஷாங்காய் நகரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய பெபின்கா சூறாவளி

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement