செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

அமெரிக்க அதிபர்கள் - அதிபர் வேட்பாளர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

Jul 15, 2024 09:06:07 AM

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது நபர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் கடந்த 150 ஆண்டுகளில் அதிபர்கள் மீதும் அதிபர் வேட்பாளர்கள் மீதும் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
1865-ஆம் ஆண்டு, தலைநகர் வாஷிங்டனில் உள்ள தியேட்டரில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1881-ஆம் ஆண்டு, வாஷிங்டனில் ரயில் நிலையத்தில் அதிபராகப் பதவியேற்ற ஆறே மாதத்தில் ஜேம்ஸ் கர்ஃபீல்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
1901-ஆம் ஆண்டு, நியூயார்க் மாகாணத்தில், அதிபர் வில்லியம் மெக்கின்லி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1912-ஆம் ஆண்டு, விஸ்கான்சின் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் காயமின்றி உயிர் தப்பினார்.
1963-ஆம் ஆண்டு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டாலர் நகரில் மனைவியுடன் காரில் சென்றுகொண்டிருந்த ஜான் எஃப் கென்னடி, சுட்டுக்கொல்லப்பட்டார்.
1968-இல், முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் சகோதரரும் அதிபர் வேட்பாளருமான ராபர்ட் எஃப் கென்னடி லாஸ் ஏஞ்சலீஸில் பிரசாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
1975-ஆம் ஆண்டு, 3 வாரங்களில் 2 முறை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் அதிபர் ஜெரால்டு ஃபோர்டு உயிர் தப்பினார்.
1981-இல், வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அதிபர் ரொனால்டு ரீகன் காயமடைந்தார்.


Advertisement
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்
டிரம்பை சுட முயன்றவருக்கு உடந்தை யார்? போலீசார் தீவிர விசாரணை
சீனாவின் ஷாங்காய் நகரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய பெபின்கா சூறாவளி

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement