பொருளாதார மந்தநிலை ஏற்படும் தருவாயில் ஜெர்மனி உள்ளதாக வல்லுனர்கள் எச்சரித்துவரும் நிலையில், உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்ய வேண்டாம் எனவும், ராணுவ செலவீனங்களை குறைக்குமாறும் அரசை வலியுறுத்தி பெர்லினில் மக்கள் பேரணி சென்றனர்.
ராணுவ செலவீனங்களுக்காக பட்ஜெட்டில் எட்டேகால் லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதால், எரிவாயு மற்றும் மின் கட்டணம் மேலும் உயரலாம் என மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி போரை மேலும் வளர்ப்பதற்கு பதிலாக பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு பல தரப்பினர் அறிவுறுத்தி வருகின்றனர்.