உயர் வெடிபொருட்கள், ரசாயனம், அணு ஆயுதம் உள்ளிட்டவற்றை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை படைத்த பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா மீண்டும் இன்று நடத்தியுள்ளது.
வடகொரியா அதன் கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து இந்த சோதனையை நடத்தியதாக தென்கொரியாவும், ஜப்பானும் தெரிவித்துள்ளன.
அமெரிக்க படைகளும், தென்கொரிய படைகளும் அண்மையில் நடத்திய கூட்டு போர் பயிற்சிக்கு பதிலடி தரும் வகையில், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
வடகொரியாவின் இந்த செயல், பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச சமூகத்தை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளது.