செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

பாகிஸ்தான்: சிறை நிரப்பும் பிரதமர்கள்

May 10, 2023 11:22:46 AM

பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் உயர் பதவியை அலங்கரித்தவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்ட மோசமான வரலாற்றைக் காணலாம்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார். இவர் மட்டுமின்றி அந்நாட்டில் பிரதமராக இருந்த பலரும் சிறையில் அடைக்கப்பட்ட வரலாறு உண்டு.

1962ல் பாகிஸ்தானின் 5வது பிரதமராக இருந்த ஹுசைன் ஷஹீத் சுஹ்ரவர்தி என்பவர் ராணுவத் தளபதி அயூப்கானின் ராணுவ ஆட்சியை ஏற்க மறுத்ததால் பொய்யான குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு பின் பிரதமராக வந்த சுல்பிகர் அலி பூட்டோ 1977ல் அரசியல் எதிரியைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். இறுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டு 1979ல் தூக்கிலிடப்பட்டார்.

சுல்பிகர் அலி பூட்டோவுக்குப் பின் பொறுப்பிற்கு வந்த அவரது மகள் பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானில் இரண்டு முறை பிரதமராக இருந்தார். ஜியா வுல் ஹக்கின் சர்வாதிகாரத்தின் கீழ் 1985 சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் 1999ம் ஆண்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெனாசிரைத் தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்ற நவாஸ் ஷெரீப் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் தனது மகள் மரியம் நவாசுடன் 2018ல் கைது செய்யப்பட்டார். பின்னர் மற்றொரு ஊழல் வழக்கில் சிக்கிய நவாஸ் ஷெரீப் மறு ஆண்டே நாடு கடத்தப்பட்டார்.

நவாசுக்குப் பின் வந்த பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி, முந்தைய ஆட்சிக் காலத்தில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் தற்போது பிரதமராக இருக்கும் ஷெஹ்பாஸ் ஷெரீப், கடந்த 2020ம் ஆண்டு பணமோசடி வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Advertisement
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement