சீனாவில் கோவிட் பரவல் காரணமாக ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் நிலைகுலைந்து போயுள்ளது.
மருத்துவமனைகளில் குவியல் குவியலாக சடலங்கள் குவிந்துள்ள பயங்கரமானவீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அதிகளவில் முதியோர் உயிரிழப்பதால் தினசரி 9 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியானது.
இதனால் சீன சுகாதாரத்துறை கோவிட் இறப்பு எண்ணிக்கை தகவல்கள் வெளியிடுவதை நிறுத்தி விட்டது.
இந்தியா உள்பட ஆறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.