வேல்ஸ் இளவரசி கேத்தரின் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் தனது ஆடையில் அணிந்திருந்த சிகப்பு கலர் பாப்பி மலரை விரும்பிய சிறுவனுக்கு அதை வழங்கினார்.
லண்டனில் உள்ள குழந்தைகள் மையத்திற்கு கேத்தரின் சென்றார்.
அப்போது தனது பெயரை கேட்ட 3 வயது சிறுவன் அகீமுடன் கேத்தரின் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவரது ஆடையில் இருந்த பாப்பி மலரையே சிறுவன் அகீம் பார்த்துக்கொண்டிருந்தான்.
அதனைக் கவனித்த கேத்தரின், இது உனக்கு வேண்டுமா எனக்கேட்டு தனது ஆடையில் இருந்து கழற்றி சிறுவனுக்கு கொடுத்தார்.