செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

உக்ரைனில் ரஷ்யா சரமாரி ஏவுகணைவீச்சு.. உலக நாடுகள் கண்டனம்

Oct 11, 2022 10:48:15 AM

உக்ரைன் தலைநகர் கீவ் மீது, ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் ஐராப்பாவின் மிக நீளமான பாலம் இரு தினங்களுக்கு முன்பு வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டது. இதில் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டிய நிலையில், அதனை உக்ரைன் மறுத்தது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று அடுத்தடுத்து 5 இடங்களில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

தாக்குதலில் கீவில் உள்ள 11 முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்ததாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான பெலாரஸ் மற்றும் கிரீமியாவிலிருந்து 84 குரூஸ் ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் குண்டு மழையில், கீவ்விலுள்ள ஏராளமான கட்டிடங்கள், வாகனங்கள் தீக்கிரையான நிலையில், எங்கு பார்த்தாலும் தீப்பிழம்பாக காட்சியளித்தது.

தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியானதாக, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார். தாக்குதலுக்கு ஈரானின் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என இம்மானுவேல் மேக்ரன் குற்றம் சாட்டினார்.

பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமாது எனவும், போர்க்குற்றம் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தித்தொடர்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்களுடன் புடின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கான முயற்சிகள் அதிகமாகும் பட்சத்தில், ரஷ்யாவின் பதில் கடுமையாக இருக்கும் என புடின் தெரிவித்தார்.

 


Advertisement
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்
டிரம்பை சுட முயன்றவருக்கு உடந்தை யார்? போலீசார் தீவிர விசாரணை
சீனாவின் ஷாங்காய் நகரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய பெபின்கா சூறாவளி

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement