அமெரிக்காவில் இந்தியர்களை தரக்குறைவாக பேசியதாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், அமெரிக்க வாழ் மெக்சிகோவை சேர்ந்த எஸ்மெரல்டா என்ற பெண், அமெரிக்க வாழ் இந்திய பெண்கள் 4 பேரிடம் மிக கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்திய பெண்களை தாக்க முயற்சி செய்ததோடு, இந்தியர்களை வெறுப்பதாக இனவெறியைத் தூண்டும் வகையில் பேசிய நிலையில், தகவலறிந்து விரைந்த போலீசார், தீவிரவாத அச்சுறுத்தல் என்ற பெயரில் அந்த பெண்ணை கைது செய்தனர்.