செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இலங்கை ராணுவம் நடவடிக்கை... போராட்டக்காரர்கள் முகாம்கள் அகற்றம்

Jul 22, 2022 11:49:02 AM

இலங்கையில் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் மற்றும் ராணுவ வீரர்கள் வலுக்கட்டாயமாக கலைத்தனர். அதிபர் அலுவலகம் முன் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களையும் அவர்கள் அப்புறப்படுத்தினர். 

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லங்களைக் கைப்பற்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் அலுவலகம் முன் தற்காலிக முகாம் மற்றும் தடுப்புகளை அமைத்து அரசுக்கு எதிராகப் போராடி வந்தனர்.

இந்நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்ட நிலையில், அரசு அலுவலகங்களை ஆக்கிரமிப்பது சட்ட விரோதம் என்றும், அலுவலகங்களை விட்டு வெளியேறாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து இன்று பிற்பகலில் போராட்டத்தை கைவிட்டு திரும்புவதாக போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நள்ளிரவில் அதிபர் அலுவலகம் முன் திரண்ட ராணுவம் மற்றும் போலீசார், குழுமியிருந்த போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

தார்பாய் உள்ளிட்டவைகளை கொண்டு அமைக்கப்பட்டு இருந்த முகாம்கள், தடுப்புகள், குடில்களை ராணுவ வீரர்கள் அப்புறப்படுத்தினர்.

அதிபர் அலுவலகம் மற்றும் குடியிருப்பில் தங்கி இருந்தவர்களை வலுக்கட்டாயமாக ராணுவ வீரர்கள் வெளியேற்றினர்.


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement