செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

கோத்தபய ராஜினாமா மக்கள் கொண்டாட்டம்.! இடைக்கால அதிபர் ரணில்.!

Jul 15, 2022 03:21:36 PM

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச ராஜினாமா அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.

மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் தப்பிச் சென்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார். அவரது ராஜினாமா அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக சபாநாயகர் மகிந்தா யப்பா அபேவர்தனா (Mahinda Yapa Abeywardana) தெரிவித்துள்ளார்.

நாளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அதுவரை, ரணில் விக்கிரமசிங்கே இடைக்கால அதிபராக பதவி வகிப்பார் என்றும் தெரிவித்தார்.

புதிய அதிபர் தேர்வு செய்யும் பணியை விரைந்து முடிக்க விரும்புவதாகவும் இதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் சபாநாயகர் கேட்டுக் கொண்டார். மேலும், பொதுமக்களும் அமைதிகாத்து இப்பணிக்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் இலங்கை தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா முன்னிலையில் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.

இதனிடையே கோத்தபய ராஜபக்சே அடைக்கலம் கேட்டு சிங்கப்பூர் வரவில்லை என்றும், அவருக்கு அடைக்கலம் ஏதும் அளிக்கப்படவில்லை எனவும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அவர் தனிப்பட்ட பயணமாக வந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.


Advertisement
சீன மின்சார கார்களுக்கு 37.6 சதவீதம் வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
லெபனான் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை... ஒரே நாளில் 35 குழந்தைகள் உள்பட 492 பேர் பலி
சீனாவில் நடைபெறும் அறுவடைத் திருவிழா
இந்தியாவில் முதலீடு - அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இலங்கையின் புதிய அதிபராகிறார் அனுரா குமார திசநாயக்கே!
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
ரஷ்யாவுடனான போரின் முடிவு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் கைகளில் உள்ளது - ஜெலன்ஸ்கி
அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா

Advertisement
Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்


Advertisement