செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இலங்கையில் மக்கள் வன்முறையைக் கைவிட வேண்டும் என ராணுவம் எச்சரிக்கை.!

Jul 15, 2022 06:18:15 AM

இலங்கையில் மக்கள் வன்முறையைக் கைவிட வேண்டும் என ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு நகரின் முக்கிய வீதிகளில் பாதுகாப்புக்காக பீரங்கி வாகனங்கள்  நிறுத்தப்பட்டுள்ளன. 

இலங்கை அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்ச மாலத்தீவுக்கும் அங்கிருந்து சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்றபின், இமெயில் மூலம் தமது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று கோத்தபயவையும் அவர் மனைவி உள்ளிட்டோரையும் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்ப மாலத்தீவு அரசு ஒத்துழைப்பு அளித்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக கோத்தபய சிங்கப்பூர் வந்திருப்பதாகவும், அவர் விரைவில் சவுதி அரேபியாவுக்கு செல்ல இருப்பதாகவும் சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இலங்கை பிரதமரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தேசியக் கொடியை இறக்க முயன்றனர். அப்போது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

வன்முறை நீடித்து வருவதால், அமைதியை காக்க ஒத்துழைப்பு தரும்படி ராணுவத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாளிகைகளை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இலங்கையில் இதனால் சற்று அமைதி திரும்பியுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை பாதுகாக்க ராணுவ பீரங்கிகள் கொழும்பு நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜினாமா செய்ததைக் கொண்டாடும் விதமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் பட்டாசுகள் வெடித்து, கோஷங்கள் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.


Advertisement
இலங்கையின் புதிய அதிபராகிறார் அனுரா குமார திசநாயக்கே!
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
ரஷ்யாவுடனான போரின் முடிவு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் கைகளில் உள்ளது - ஜெலன்ஸ்கி
அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு

Advertisement
Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?


Advertisement