செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

நேற்று மாலத்தீவு.! இன்று சிங்கப்பூர்.! நாளை சவுதி.! நாடு, நாடாக ஓடும் கோ.பக்சே.!

Jul 14, 2022 02:13:29 PM

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் தப்பிச் சென்றார். இச்சூழ்நிலையில் இலங்கையில் வியாழக்கிழமை காலை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியால் ஆவசேமடைந்த இலங்கை மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, ராணுவ உதவியுடன் மாலத்தீவு தப்பிச் சென்றார். இதனால் மேலும் கோபமடைந்த மக்கள் பிரதமர் அலுவலகத்திற்குள்ளும் நுழைந்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இலங்கையில் வியாழக்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொது சாலைகள், பூங்காக்கள், ரயில் நிலையங்கள், பொழுதுபோக்கு மைதானங்கள் மற்றும் பொது மைதானங்களில், எழுத்துப்பூர்வ அனுமதி பெற்றவர்கள் தவிர யாரும் செல்லக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்திற்குள், பிரதமர் அமரும் இருக்கையை ராணுவத்தினர் பாதுகாத்து வருகின்றனர். ராணுவ டாங்கி மூலம் ராணுவத்தினர் சாலைகளில் ரோந்து வந்தனர். இந்நிலையில் பொது இடங்களிலிருந்து கிளம்புவதாக போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, மாலத்தீவிலிருந்து சவுதி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோத்தபய ராஜகபக்சே, சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து அவர் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு செல்வார் என மாலத்தீவு அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
இலங்கையின் புதிய அதிபராகிறார் அனுரா குமார திசநாயக்கே!
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
ரஷ்யாவுடனான போரின் முடிவு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் கைகளில் உள்ளது - ஜெலன்ஸ்கி
அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு

Advertisement
Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்


Advertisement