செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ராணுவ ஒத்துழைப்போடு மாலத்தீவு தப்பிய கோத்தபய

Jul 13, 2022 01:05:17 PM

இலங்கை ராணுவத்தின் முழு ஒத்துழைப்போடு கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு சென்றதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது. இதனிடையே, கோத்தபய தப்பிச் செல்ல உதவியாக வரும் தகவல்களுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிபர் பதவி விலகக் கோரி அவரது மாளிகையை கைப்பற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கோத்தபய ராஜபக்சே, அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி தலைமறைவானார்.

இலங்கையில் அமைய உள்ள புதிய அரசின் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப, மனைவி மற்றும் பாதுகாவலர்களுடன் ஆன்டனவ்-32 ராணுவ விமானம் மூலம் மாலத்தீவுக்கு கோத்தபய ராஜபக்சே தப்பிச் சென்றார்.

இலங்கை ராணுவத்தின் முழு ஒத்துழைப்போடு கோத்தபய மாலத்தீவு சென்றதாக, இலங்கை விமானப்படை விளக்கம் அளித்துள்ளது.

இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி, அதிபருக்குரிய சிறப்பு அதிகாரத்தின்படி, இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்ததால்
கோத்தபய, அவரது மனைவி மற்றும் இரு பாதுகாவலர்கள், இன்று அதிகாலை மாலத்தீவு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

குடியேற்றத்துறை மற்றும் சுங்கத்துறை சட்டங்களுக்கு உட்பட்டு, காட்டுநாயக்கன் விமான நிலையத்திலிருந்து விமானப்படை விமானம் மூலம் கோத்தபய புறப்பட்டுச் சென்றதாக இலங்கை விமானப்படை கூறியுள்ளது.

இந்த நிலையில் கோத்தபய தப்பிச் செல்ல இந்தியா உதவியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை என்றும் ஊகத்துகுரியது எனவும்
கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே கோத்தபயவின் ராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement