செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இலங்கையில் ஜூலை 20 ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு - சபாநாயகர் அறிவிப்பு

Jul 12, 2022 06:32:06 AM

இலங்கையில் புதிய அதிபர் 20ந் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். கோத்தபய வெளிநாடு தப்பிச் சென்றாரா அல்லது உள்நாட்டில் பதுங்கி உள்ளாரா என குழப்பம் நீடித்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த வன்முறைகளுக்குப் பிறகு கோத்தபய ராஜபக்சேவை காணவில்லை என்றும் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்பட்டது.

கடற்படை கப்பலான கஜாபஹூவை நோக்கி அதிபரின் உடைமைகள் கொண்டு செல்லப்பட்டதால் கடல்வழியாக குடும்பத்தினருடன் அவர் தப்பிச் சென்று விட்டதாகத் தகவல் வெளியாகின.

இந்நிலையில், கோத்தபய அண்டை நாட்டில் இருப்பதாகவும் புதன்கிழமை கொழும்பு திரும்பி அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் கோத்தபய இலங்கையில் தான் இருக்கிறார் என்று அதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சூழலால் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்ததைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பலர் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்து விட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக இலங்கை அரசியல் தலைமையில் வெற்றிடம் நிலவுகிறது. அதிபர் மற்றும் பிரதமர் பதவியில் யாரை அமர்த்துவது என்பது குறித்து எதிர்க்கட்சியினரிடம் தெளிவில்லாத நிலை நீடித்து வருகிறது.

பிரதான எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக சஜித் பிரேமதாசா இடைக்கால அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 113 எம்.பி.க்கள் தேவைப்படும் நிலையில், சஜித்தின் சமகி ஜன பலவேகய கட்சிக்கு 50 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில், வரும் 15 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடி முக்கிய முடிவுகள் எடுக்கும் என்றும், 20 ஆம் தேதி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement